Skip to main content

பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமனத்தில் பாராளுமன்ற சட்டத்தை கடைபிடிக்க வலியுறுத்தல்!

Published on 18/01/2021 | Edited on 18/01/2021
fgjh


பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமனத்தில் பாராளுமன்ற சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு பல்கலைக்கழக மற்றும் கல்லூரி எஸ்சி எஸ்டி ஆசிரியர் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

 

தமிழ்நாடு பல்கலைக்கழக மற்றும் கல்லூரி எஸ்சி எஸ்டி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்ணையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், " இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி இயங்கிவருகின்றது அதேபோல ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்களும் இந்த மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நிலையில் இட ஒதுக்கீடு கொள்கையை மத்திய அரசுக்கு புறம்பாக மாநில அரசு பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர் இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் அழகிய காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும்போது அந்தத் துறையை ஒரு அலகாக கொண்டு சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டு வந்தது.

 

ஆனால் குறிப்பாக பட்டியலின மக்களுக்கு எந்தப் பல்கலைக் கழகங்களிலும் பேராசிரியர் பணி நியமனங்களில் பொதுப்பிரிவு பணியிடங்களில் பணிய மறுத்தது கிடையாது இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றினார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் பணி நியமனங்களின் போது ஒட்டுமொத்த பல்கலைக்கழகம் அல்லது உயர் கல்வி நிறுவனத்தையும் பணியிடங்களை ஒரே அலகாக எடுத்துக் கொண்டு பேராசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

 

அதன்படி தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் இந்த பாராளுமன்ற சட்டத்தை செயல்படுத்தினால் பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள அனைத்து பேராசிரியர் பணியிடங்களை மொத்தமாக எடுத்து அதில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றினால் அனைத்து இன மக்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்கும் ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தால் 22 பேராசிரியர் பணியிடங்களுக்கான விளம்பரம் தமிழகத்தில் உள்ள நாளிதழ்களில் வெளிவந்தது இதில் 3 பேர் பேராசிரியர் பணியிடங்கள் பொதுப்பிரிவினருக்கு என்றும் மீதமுள்ள 19 பேராசிரியர் பணியிடங்கள் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு இட ஒதுக்கீடு இல்லாத பணி என்று விளம்பரம் வந்துள்ளது.

அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைகழகம் இணைந்து உயர்கல்வித் துறைச் செயலர் மூலம் ஒரு அறிக்கையை பெற்று அந்த அறிக்கையானது மத்திய கல்வி நிறுவனம் சட்டம் 2019 மத்திய பல்கலைக்கழகம் மட்டும்தான் செல்லும் என்றும் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் பழைய விதியின் வழியே செயல்படலாம் என ஒரு அறிவுரையை பெற்று உள்ளது ஆகையால் உயர்கல்வித் துறையின் இந்த கடிதத்தை கொண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகம் அனைவருக்குமான இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்கு எதிராக வெற்றியும் பெற்றது. எனவே தமிழக அரசு விரைவில் மத்திய அரசினுடைய இந்தப் பல்கலைக் கழக சட்டத்தை அனைவருக்கும் தெளிவுபடுத்தி பல்கலைக் கழகங்களில் காலியாக இருக்கக்கூடிய பேராசிரியர் பணியிடங்கள் இணை பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் என அனைத்திலும் முழுமையான இட ஒதுக்கீட்டை பின்பற்றினால் 200 புள்ளி இன சுழற்சி அடிப்படையில் அனைத்து வகுப்பினருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் இது குறித்த விரிவான அறிக்கையை தராத பட்சத்தில் தங்களுடைய தமிழ்நாடு பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஏடிஎஸ்பி ஆசிரியர் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்" என்றும் அறிவித்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
chennai mit college issue

சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. (M.I.T.) என்ற பெயரில் பிரபல பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கல்லூரிக்கு இன்று (06.03.2024) மாலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை காவல்துறையின் சார்பில் மோப்ப நாயை கொண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாகச் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், இன்று காலை சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என பெங்களூரு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

மர்மமான முறையில் மாணவர் மரணம்; விசாரணை நடத்த போலீஸார் தயக்கம்?

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Police reluctant to investigate student passed away in Vellore

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ளது கார்க்கூர் கிராமம். இங்கு  இயங்கி வரும் பாலாறு வேளாண்மை கல்லூரியில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கிரிஷின் நகரை சேர்ந்த ரவி எலக்ட்ரிஷியன் என்பவர் இளைய மகன் பிரதாப் (18) என்பவர் முதலாமாண்டு  படிக்கிறார். கல்லூரி ஹாஸ்டலில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த 10-ந் தேதி அரக்கோணம் சென்று தனது வீட்டில்  பெற்றோரை பார்த்து விட்டு மீண்டும் பிப்-12ஆம் தேதி திங்கள் கிழமையன்று கல்லூரிக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிப்ரவரி 17 ஆம் தேதி காலை சுமார் 6.00 மணியளவில் கல்லூரி ஹாஸ்டல் வார்டனிடம் ஜெராக்ஸ் எடுக்க அருகிலுள்ள மேல்பட்டி கிராமத்திற்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் காலை 7.00 மணியளவில் மேல்பட்டி ரயில் நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் காட்பாடி செல்லும் ரயில் மார்க்கம் பகுதியில் இருப்பு பாதையில் மாணவன் பிரதாப் தலை மற்றும் முகத்தில் படுகாயத்துடன் மயங்கி கிடந்ததை பார்த்த ரயில்வே பணியாளர்கள் மேல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக  மேல் பட்டி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயத்துடன் கிடந்த மாணவன் பிரதாப்பை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். 

அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று உயிரழந்தார். பாலாறு வேளாண்மைக் கல்லூரி, முன்னாள் அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளருமான கே.சி வீரமணிக்குச் சொந்தமானது. இந்த கல்லூரி மாணவர்தான் இறந்துள்ளார், இது கொலையா? தற்கொலையா என தீவிரமாக விசாரணை நடத்த வேண்டிய போலீசார் இதில் மெத்தனமாக விசாரணை நடத்துகின்றனர். இது முன்னாள் அமைச்சரின் கல்லூரி என்பதால் அதற்கு எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படி நடப்பதாக இறந்த மாணவனின் பெற்றோரும், உறவினர்களும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.