Skip to main content

ஊரே வெள்ளக்காடு..  ஆனா இந்தக் குளத்துல ஒரு சொட்டு தண்ணியில்ல...!

Published on 21/11/2021 | Edited on 21/11/2021

 

 Ure flood forest .. but there is not a drop of water in this pond ...!

 

கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கனமழையால் தமிழகம் தத்தளிக்கிறது. சுமார் 15 வருடங்களுக்கு பிறகு ஏரி, கண்மாய்கள் நிரம்பி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகள், பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பல வருடமாகப் பாலைவனமாகக் காட்சியளித்த, மணல் கொள்ளையில் திளைத்த காட்டாறுகளில் கூட இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் சீறிப் பாய்கிறது. அதேபோலதான் புதுக்கோட்டை நகரம் உள்பட மாவட்டத்தில் பல ஏரி, கண்மாய்கள் நிறைந்து உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. சாலைகளில் தண்ணீர் ஓட அதில் மீன் பிடித்து மகிழ்ந்தனர் இளைஞர்கள்.

 

 Ure flood forest .. but there is not a drop of water in this pond ...!

 

இப்படியான புதுக்கோட்டையில்தான் இப்போது வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத பெரிய ஏரிகள், குளங்கள் நிறையவே உள்ளது. அம்புலி ஆற்றின் தொடக்கம் மாஞ்சன்விடுதி, மாஞ்சா கண்மாய். சுமார் 200 ஏக்கர் பரப்பளவுள்ள மாஞ்சா கண்மாயில் கடைசியாகத் தண்ணீர் நிறைந்து 2006 ம் ஆண்டுதான். அதன் பிறகு அதன் வரத்துவாரிகள் அடைக்கப்பட்டதால் இப்போதுவரை தண்ணீர் கண்மாய் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

 

இந்த அம்புலி ஆற்றின் குறுக்கே கொத்தமங்கலத்தில் காமராஜரால் கட்டப்பட்ட அணைக்கட்டிலிருந்து அன்னதானக்காவேரி கால்வாய் மூலம் கீரமங்கலம், சேந்தன்குடி, நகரம் கிராமங்களை உள்ளடக்கி அமைந்துள்ள மிகப் பெரிய ஏரியான பெரியாத்தாள் ஊரணி ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாய் சுருங்கி ஆக்கிரமிக்கப்பட்டதால் தண்ணீர் இல்லை. பெரியாத்தாள் ஊரணி ஏரி நிறைந்தால் சுற்றியுள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீர் உயரும் என்பதால் இளைஞர்களாக ஒன்றிணைந்து கால்வாய் சீரமைப்பைத் தொடங்கியுள்ளனர்.

 

 Ure flood forest .. but there is not a drop of water in this pond ...!

 

அதேபோல அரிமளம் நகரின் மையப் பகுதியில் உள்ள செட்டி ஊரணி பெரிய குடி தண்ணீர் குளம். தற்போது வரத்து வாரிகளை சுற்றியுள்ள தைலமரக்காடுகளில் வனத்துறை அடைத்துக் கொண்டதால் தண்ணீர் இல்லாத வறண்ட குளமாகக் காணப்படுகிறது.

 

அதாவது இது போன்ற பெரிய, ஏரி குளங்களுக்குத் தண்ணீர் வரும் வரத்துவாரிகளை தனியார் ஆக்கிரமிப்பு ஒரு பக்கம் என்றால் வனத்துறை சுற்றுச்சூழலைக் கெடுத்து வறட்சியை ஏற்படுத்தும் தைல மரங்களை வளர்க்க பெரிய பெரிய வரப்புகளைக் கட்டி தண்ணீரைத் தடுத்துவிடுவதால் கடந்த ஆண்டு ரூ. 17 லட்சத்தில் தூர்வாரிய மாஞ்சன்விடுதி மாஞ்சாக்கண்மாய், செட்டி ஊரணி என மாவட்டத்திலுள்ள நூற்றுக் கணக்கான ஏரி, குளங்கள் வறண்டு தான் கிடக்கிறது. மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளாததால் தொடர்ந்து வறண்டு கிடக்கிறது நீர்நிலைகள்.

 

 Ure flood forest .. but there is not a drop of water in this pond ...!

 

இந்த வார இறுதியில் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுகள் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதற்குள் போர்க்கால அடிப்படையில் மாவட்ட அரசு இயந்திரங்கள் செயல்பட்டால் தண்ணீரைத் தடுக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக ஏரி, குளங்களில் தண்ணீரை நிரப்பலாம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.