Skip to main content

கைதானது முதல் விடுவிக்க அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரை.. -முழு விபரங்களைத் தாக்கல் செய்ய நளினி தரப்புக்கு உத்தரவு!

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி கைதானது, விடுவிக்க அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரையிலான முழு விவரங்களை ஏப்ரல் 7-ம் தேதி தாக்கல் செய்ய நளினி தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்க, தமிழக அமைச்சரவை 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி,  ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

 

Until the government resolves the release from arrest ..  instructed to Nalini file full details


தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டுமென்றும், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிடக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், மாருராம் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆளுநர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அமைச்சரவை முடிவு ஆளுநரைக் கட்டுப்படுத்தும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், ஆளுநருக்கு என்று தனிப்பட்ட முறையில் அதிகாரம் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

 

Until the government resolves the release from arrest ..  instructed to Nalini file full details


இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தன்னை விடுவிக்கக் கோரி நளினி நான்காவது முறையாக நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.  இந்தியாவிலேயே அதிக காலம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரே பெண் கைதி நளினிதான். ஆளுநர் அரசியலமைப்பு சட்ட விதிகளில் கடமை தவறும்போது நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்தலாம். 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு  பரிந்துரை அனுப்பப்பட்டது என்று தெரிவித்தார்.

 

Until the government resolves the release from arrest ..  instructed to Nalini file full details


தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையின் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் தவறிவிட்டதாக புகார் தெரிவித்த அவர், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரை விடுதலை செய்ய ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டது. 10 ஆண்டு, 14 ஆண்டு மற்றும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவரை விடுவிப்பதற்கான திட்டம் தமிழகத்தில் உள்ளது எனவும், அதன் அடிப்படையில் 2002-ம் ஆண்டே விடுதலைக்கு நளினி தகுதி பெற்றிருந்தார் எனவும்  வாதிட்டார்.

ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரிய இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்ய வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில்     1991-ம் ஆண்டு கைது செய்யப்பட்டது முதல் விடுதலை செய்ய அமைச்சரவை பரிந்துரைத்தது வரையிலான முழு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.