Skip to main content

முடியாத கஜா புயல் போராட்டம்... ஆலங்குடிக்கு வந்த 500 டன் அரிசி தரமற்ற ரேசன் அரிசியா?

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

கஜா புயலில் பாதிக்கப்பட்ட நெல்லில் அறைக்கப்பட்ட தரமில்லாத அரிசிகளை ஆலங்குடி குடோனில் இருப்பு வைக்கப்பட்டு மக்களுக்கு வழங்குவதை நிறுத்தி தரமான அரிசிகளை வழங்க வேண்டும் என்று கூட்டுறவு சங்க இயக்குநர் செங்கோடன் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

 

ration rice

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேசன் அரிசி பழுப்பு நிறத்திலும், துர்நாற்றத்துடனும் உள்ளதாக கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

 

 

இந்தநிலையில் கொத்தமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்படும் சி.ஆர். அரிசி மிகவும் தரமற்றதாக உள்ளதாக கூட்டுறவு சங்க இயக்குநர் செங்கோடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் அரிசியை மாற்றி வழங்கவில்லை என்று ஆலங்குடி, புதுக்கோட்டையில் உள்ள உணவு துறை அதிகாரிகளுக்கு நேரில் புகார் மனு கொடுத்துள்ளார்.

 

 

இது குறித்து கூட்டுறவு சங்க இயக்குநர் செங்கோடன் கூறும் போது.. கொத்தமங்கலம் கூட்டுறவு சங்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள சி.ஆர் அரிசி பழுப்பாகவும், துர்நாற்றத்துடனும் உள்ளது என்பதை நேரில் பார்த்து அதிகாரிகளிடம் கேட்டால் குடோனில் இருந்து அனுப்பும் அரிசி அப்படித்தான் உள்ளது என்றார்கள். அதனால் ஆலங்குடி குடோன் அதிகாரிகளை நேரில் சந்தித்து அரிசியை மாற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தேன்.

 

ration rice

 

அப்போது அதிகாரிகள் சொன்ன தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அதாவது.. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி 3 குடோன்கள் உள்ளது. இதில் புதுக்கோட்டைம மற்றும் திருமயத்திற்கு சன்னரக அரிசி இறக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஆலங்குடி குடேனுக்கு கொண்டுவரப்பட்டுள்ள சுமார் 500 டன் அரிசியும் கஜா புயலின் போது மழையில் நனைந்து பாதிக்கப்பட்ட நெல்லி இருந்து அரைக்கப்பட்ட தரமற்ற அரிசி தான் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் அரிசி தரமில்லை என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அதனால் மாவட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன் பிறகு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உடனடியாக தரமற்ற அரிசிக்கு பதிலாக தரமான அரிசியை மாற்றி அனுப்ப கேட்டும் இன்னும் கொண்டுவரப்படவில்லை.

 

 

ஆனால் கொத்தமங்கலத்திற்கு உடனடியாக மாற்ற நல்ல அரிசி அனுப்புகிறோம் என்றார்கள். ஆனால் ஆலங்குடி குடோனில் வைக்கப்பட்டுள்ள 500 டன் தரமற்ற அரிசிகளையும் மாற்ற மக்களுக்கு வழங்க வேண்டும் இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மனுவில் குறிப்பிட்டதுடன் அதிகாரிகளிடமும் நேரடியாக கூறியுள்ளோம் என்றவர் மேலும் ஒரு வருடமாக ரேசன் கடைகளுக்கு உளுந்தம் பருப்பு அனுப்புவதில்லை. மீண்டும் உளுந்தம் பருப்பு அனுப்ப வேண்டும். 

 

 

ஆலங்குடி பகுதி மக்களை வஞ்சிக்க கஜா புயலில் பாதிக்கப்பட்ட போது ஆலங்குடி பகுதியில் தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்தியதால் தரமற்ற அரிசி அனுப்புகிறார்களா என்பது தெரியவில்லை உடனடியாக குடோனில் உள்ள தரமற்ற 500 டன் அரிசியை எடுத்துக் கொண்டு தரமான அரிசி வழங்கவில்லை என்றால் விரைவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

1,400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; இருவர் கைது

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
1,400 kg ration rice smuggling; two arrested

திருச்சியில் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்ற 1,400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட ரோந்து மற்றும் வாகன சோதனையின்போது, திருச்சி தென்னூர் ரங்கநாதபுரம் ஆபீஸர்ஸ் காலனி அருகே நான்கு சக்கர வாகனத்தில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நிகழ்விடம் சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதில், இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு வந்த ரேஷன் அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது. அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் தென்னூர் குத்பிஷா நகரைச்சேர்ந்த ப.அப்துல் சுக்கூர் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஹ.சதாம் உசேன் (32) என்பதும், ரேஷன் அரிசியை பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும், அந்த வகையில் விற்பனைக்காக அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1,400 கிலோ அரிசி, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய உத்தரவு!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
District Collectors Chief Minister M.K. Stalin's main order

நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2024 ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாகப் பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 7 ஆயிரத்து 40 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.