Skip to main content

பாதுகாப்பு இல்லாத கரோனா சிகிச்சை மையங்கள்... உணவுக்கு தடுமாறும் நோயாளிகள்!

Published on 01/05/2021 | Edited on 01/05/2021

 

Unsafe corona treatment centers ... Patients who stumble on food!

 

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவருக்கு முன்பே கிராமங்கள் தோறும் சோதனைச்சாவடிகள் அமைத்து கிருமி நாசினி தெளித்த பிறகே ஊருக்குள் அனுமதித்தனர் இளைஞர்கள். ஊராட்சிகள் தோறும் கிருமி நாசினி, பிளிச்சிங்பவுடர் அடிக்கடி தௌக்கப்பட்டு பொது இடங்களில் கை கழுவ சோப்பு, தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. சாதாரணமாக ஒவ்வொரு கிராமத்து கடைகள் தொடங்கி நகரங்களில் உள்ள கடைகள், வீடுகள் வரை மஞ்சள் கரைசல் வைத்து கை கழுவச் செய்தனர். இத்தனை முன்னெச்சரிக்கைகளையும் தாண்டி பல தெருக்கள், வீடுகளுக்கு யாரும் வரமுடியாமல் தடுப்புகளை ஏற்படுத்தினார்கள். குறைந்தது 10 அடி தூரத்தில் நின்றே பேசினார்கள். ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டால் அந்த தெரு முடக்கப்படுவதுடன் அந்த ஊருக்கே வெளியாட்கள் செல்ல பயந்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவரை கவச உடை அணிந்து வரும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரும், செவிலியரும் தூரமாக நின்று ஏறச் சொல்லி ஏற்றிச் சென்று கரோனா சிகிச்சை மையத்தில் சேர்த்தனர். 

 

அங்கு கரோனா நோயாளிகளுக்கு சிறப்பு கவனிப்புகளுடன் சத்தான உணவு, பிரியாணி, சூப், பு ரோட்டின் நிறைந்த பயறு வகைகள் வழங்கப்பட்டு சிகிச்சையும் அளித்து திடமாக அனுப்பி வைத்தனர். ஆனால் இப்போது இது அத்தனையும் கரோனா பரவல் வேகமாக இருந்தாலும் எதுவும் நடக்கவில்லை என்பதே வேதனையாக உள்ளது.

 

புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்தில் நாம் நேரில் கண்டதும், சிகிச்சை பெற்றுவருபவர்கள் கூறியதும், கடந்த ஒரு மாதமாக வேகமாக தொற்று பரவி வரும் நிலையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல பதினோரு 108 ஆம்புலன்ஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 8 ஆம்புலன்ஸ்களில் தற்போது கரோனா நோயாளிகளை அழைத்துச் செல்கிறார்கள். கரோனா தொற்றாளர்களை அழைத்துச் செல்லும் எந்த ஒரு 108 ஊழியரும் மாஸ்க் தவிர வேறு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் அணியவில்லை. கவச உடை இல்லை. இதுபற்றி 108 ஊழியர்களிடம் கேட்டபோது, ''போன வருசம் ரொம்ப எளிமையான பிபி கிட் கொடுத்தாங்க ஆனால் இப்ப சாக்குக்கு நிகரான பிபி கிட் கொடுத்திருக்காங்க. 10 நிமிடம் கூட போட்டுக் கொண்டு வாகனம் ஓட்ட முடியாது. உடலில் உள்ள நீர் லிட்டர் கணக்கில் வியர்வையாக வெளியேறுகிறது. பிபி கிட் போட்டுக் கொண்டு சிலரை அழைத்து வந்தாலே எங்கள் உடலில் உள்ள நீர் சத்து முற்றிலும் காணாமல் போய் நாங்களும் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர வேண்டி வரும். அதனால் பிபி கிட் போடாமல் உயிரை பணயமாக வைத்து மற்றவர்கள் உயிரைக் காக்க ஓட்டுகிறோம். இப்படி ஓட்டியதில் தேனி மாவட்டத்தில் ஒரு ஆம்புலன்ஸ் பைலட் இப்ப கரோனா சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் எளிமையான பிபி கிட் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றவர்கள். மேலும், ''மாவட்டத்தில் 34 ஆம்புலன்ஸ்களில் 10 ஆம்புலன்ஸ்களுக்கு முககவசம், கையுறை கூட வழங்கவில்லை. அதனை உடனே வழங்க வேண்டும்'' என்றனர்.

 

Unsafe corona treatment centers ... Patients who stumble on food!

அதேபோல கரோனா சிகிச்சை மையத்தின் முன்னால் உணவு பைகளுடன் வரிசையாக பலர் காத்திருக்க அவர்களிடம் கேட்ட போது, ''எங்கள் உறவினர்கள் கரோனா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காலை, மதியம், இரவு உணவுகளை நாங்கள் தான் கொண்டுவந்து கொடுக்கிறோம். இதுபோல உறவினர்கள் இல்லை என்றால் பலர் பட்டினி தான் கிடக்கிறார்கள். போன வருசம் போல உணவு கொடுக்கவில்லை. சராசரியான உணவு கொடுக்கிறார்களாம். அதை சாப்பிட முடியவில்லை. அதனால் நல்லா இருக்கிற நாங்களும் ஒரு நாளைக்கு 3 வேலையும் முககவசம் அணிந்து உணவு கொண்டு வருகிறோம். இப்படி உணவு கொடுக்க வரும் பலருக்கும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதனை தடுக்க கடந்த ஆண்டு போல உணவு வழங்க வேண்டும்'' என்றனர்.

 

சிகிச்சையில் உள்ள சிலர்,  ''மற்ற நோயாளிகளைப் போல தான் நடத்தப்படுகிறோம். சிடி ஸ்கேன் எடுத்தால் அதன் ரிப்போர்ட் கொடுக்கமாட்டார்கள். நாங்களும் வெளியே போய் வாங்க முடியாது. கூட யாராவது உறவினர்கள் இருந்தால் தான் போய் வாங்கிவர முடியும். அதிலும் காலை 8 முதல் 9 மணிக்குள் ரிப்போர்ட் வாங்க போய் பதிவு செய்யனும். உறவினர்கள் இல்லாதவர்கள் சிடி ஸ்கேன் எடுத்தும் வாங்க ஆள் இல்லாமல் வாரக்கணக்கில் காத்துக் கிடக்கிறோம். அந்த ரிப்போர்ட் பார்க்காமலேயே சிகிச்சை நடக்கிறது. அதனால சிடி ஸ்கேன் எடுத்தால் உடனே கரோனா வார்டுக்கு அதன் ரிப்போர்ட் அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

 

இப்படி பல புகார்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். இவ்வளவு அசாக்கிரதையாக இருந்தால் கரோனாவை கட்டுப்படுத்த முடியாது. மேலும் பரவத்தான் செய்யலாம். மாவட்ட நிர்வாகமும் மருத்துவமனை நிர்வாகமும் துரிதமாக செயல்பட்டால் மட்டுமே பரவலை தடுக்கலாம். ஆனால் மருத்துவமனை சார்பில் ''அரசு வழிகாட்டுதல்படி எல்லாம் சரியாக நடக்கிறது'' என மருத்துவமனை வட்டாரத்தில் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்களின் தபால் ஓட்டுகளில் குளறுபடி - 50% வாக்குகள் தேக்கம்? திட்டமிட்டு நடக்கிறதா?

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Confusion in the postal ballots of teachers on election duty- 50% of votes stagnated? Is it going as planned?


தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் பரபரப்பான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு பக்கம் வாக்குப் பதிவிற்கான ஆயத்தப்பணிகளைத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதேபோல 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் கோடிக்கணக்கில் செலவழித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தேவையான 3 கட்ட பயிற்சி வகுப்புகளும் இன்றோடு முடிந்துவிட்டது.

இந்தநிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு தேவையான வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டு பயிற்சி மையத்திலேயே வாக்களிக்கவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே தேர்தல் பணி பயிற்சியில் இருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இன்று 3 வது கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தபோது அஞ்சல் வாக்குப்பதிவும் நடந்துள்ளது. பயிற்சியில் இருந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களின் வாக்கைச் செலுத்த சனிக்கிழமை மாலை 3 மணிக்கே கடைசி நாள் என்பதால் அஞ்சல் வாக்குச் சீட்டுகளை பெறச் சென்றபோது ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் சுமார் 50% பேருக்கு வாக்குச் சீட்டுகள் இல்லை. மேலும் தனித்தனி அறைகளில் வாக்குப்பதிவுகள் நடத்தாமல் ஒரே அறையில் வாக்குப்பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் கொதிப்படைந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர், திருமயம், ஆலங்குடி உட்பட பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் பின்னர், அங்கு வந்த அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் இந்தக் குழப்பம் உள்ளது. மாநில தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து அனைவரும் வாக்களிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்த பிறகே கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பயிற்சியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் கூறும் போது, தபால் வாக்குகளில் புதுமையைப் புகுத்துவதாக நினைத்து பல மையங்களில் 50% முதல் 70% பேருக்கு வாக்குரிமையை இல்லாமல் பறித்துள்ளனர். இன்றே கடைசி நாள் என்று சொல்லிவிட்டு 27% பேருக்கு மட்டும் வாக்குச்சீட்டு கொடுத்துள்ளனர். தேர்தல் ஆணையம் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு செய்கிறது ஆனால் தேர்தல் பணியில் உள்ள எங்கள் வாக்கு உரிமையைப் பறிப்பது சரியா? நாங்கள் 18 ஆம் தேதியே தேர்தல் பணிக்கு போக வேண்டும் ஆனால், வாக்களிக்காமல் எப்படி நாங்கள் நிம்மதியாக வாக்குச்சாவடிக்குள் பணி செய்ய முடியும். பலரும் பல வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம். எங்களுக்கான வாக்குரிமை பறிக்கப்பட்டால் நாங்கள் எங்களுக்கான வாக்குச் சாவடிக்கு வாக்களிக்கத் தான் போவோமே தவிர தேர்தல் பணிக்கு போகமாட்டோம். இது தமிழ்நாடு முழுவதும் உள்ளது.

இதில் ஏதோ சூழ்ச்சி இருக்குமோ என்று நினைக்கிறோம். அதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 12 முதல் 15 ஆயிரம் பேர் தேர்தல் வாக்குப்பதிவு மையங்களில் பணியில் ஈடுபடுகிறோம் இத்தனை ஓட்டுகளும் வேட்பாளர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஓட்டுகளாக உள்ளதால் வேண்டுமென்றே இந்தச் சதி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் , புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடந்த 3 ஆம் கட்ட பயிற்சியில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக 6 இடங்களில் பயிற்சிகள் நடந்தது. ஒவ்வொரு தொகுதிக்கும் 25 முதல் 30 அறைகளில் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே பயிற்சிக்கு அனுப்பி இருந்தார்கள். அந்த இயந்திரங்களை எப்படி கையாளுவது என்று கூட பயிற்சி அளிக்கப்படவில்லை. பிறகு எப்படி வாக்குப்பதிவு மையங்களில் நாங்கள் இயந்திரங்களைக் கையாளுவது என்று தெரியவில்லை. மதிய உணவும் கூட தரவில்லை என்றனர்.

தபால் வாக்கு கிடைக்கவில்லை என்றால், பணி புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட சங்கங்கள் மூலம் பேசி வருகின்றனர். தபால் வாக்குப் பதிவில் ஏன் இந்தக் குளறுபடி? மாநில கட்சிகளுக்கு வாக்குகள் பதிவாகி விடும் என்பதால் இப்படி குளறுபடி செய்கிறார்களா என்ற அச்சம் பொதுமக்களிடமும் எழுந்துள்ளது.