Skip to main content

ஆள் இல்லாத வீட்டை உரிமையாளர் போல் நடித்து வாடகைக்கு விட்ட நபர்கள்!  

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

Unoccupied housing; Persons rented to other persons!

 

நாகை ஆண்டோ சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவரது கணவர் முருகன் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். நந்தினி மூன்று குழந்தைகளுடன் நாகையில் ஆண்டோ நகரில் வசித்து வந்துள்ளார். கணவர் வெளிநாட்டில் இருப்பதால் மூன்று குழந்தைகளையும் வைத்துக்கொண்டு தனி ஆளாக சமாளிக்க முடியாமல் வீட்டைப்பூட்டிவிட்டு தூத்துக்குடியில் இருக்கும் தனது மாமியார் வீட்டிற்கு சென்று 6 மாத காலமாக குழந்தைகளோடு அங்கு இருந்துள்ளார். 

 

வீட்டை பூட்டிவிட்டு நந்தினி சென்றதை நோட்டமிட்ட, பால்பண்ணைச்சேரி பகுதியை சேர்ந்த பாலமுருகன், சிலம்பரசன் உள்ளிட்ட கும்பல் இரண்டு மாடிகள் கொண்ட நந்தினியின் வீட்டை வேறு இரண்டு நபர்களிடம் அடமானத்திற்கு கொடுத்து தங்க வைத்துள்ளனர். அதன்படி சம்பத் என்பவரிடம் மூன்றரை லட்சம் பெற்றுக்கொண்டு கீழ் வீட்டையும், ஐயப்பன் என்பவரிடம் மூன்றரை லட்சம் பெற்றுக்கொண்டு மேல் வீட்டையும் வீட்டின் உரிமையாளர் போல பத்திரம் தயார் செய்து குடி வைத்துள்ளனர். 

 

இதுகுறித்து தகவலறிந்த நந்தினி, பதறிதுடித்துக்கொண்டு தனது கணவர் பெயரில் உள்ள பட்டா, சிட்டா பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துக்கொண்டு மாமியாரை அழைத்துக்கொண்டு குழந்தைகளுடன் நாகைக்கு விரைந்துவந்து வீட்டில் இருப்பவர்களிடம் கேட்டிருக்கிறார், அவர்களோ எங்கள் வீடு என மிரட்ட வேறுவழியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் நாகூர் போலீசாருக்கு தெரியவரவே அங்கு வந்து அவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர், நந்தினியோ அங்கேயே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

 

Unoccupied housing; Persons rented to other persons!

 

விசாரணையில் நாகையைச் சேர்ந்த பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி சிறை சென்ற ராஜேஸ்வரி என்பவரின் உடன் பிறந்த சகோதரி நந்தினி என்பதும், ராஜேஸ்வரியிடம் பணம்கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சிலர் வீட்டை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 

 

தர்ணாவில் ஈடுபட்டுவரும் நந்தினி, "எனது அக்கா வாக்கிய கடனுக்கு நான் எப்படி பொறுப்பாகமுடியும், அவரது கடனுக்காக என்னுடைய சொத்தை எப்படி பத்திரமோசடி செய்து, எனது கனவரின் கையெழுத்தை போலியாக போட்டு அபகரிக்கமுடியும். எனது வீட்டை அபகரிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டுத்தர வேண்டும்" என்கிறார். 

 

இதற்கிடையில் பணம்கொடுத்துவிட்டு வாடகைக்கு வந்திருப்பவர்களும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.