Skip to main content

அனுமதி இல்லாத பார்.. வழிப்பறியில் இறங்கும் இளைஞர்கள்.. நடவடிக்கை எடுக்குமா போலீஸ்?

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

Unlicensed bars.. Youths who go on the streets.. Will the police take action?

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 140க்கு 80 டாஸ்மாக் கடைகளில் பார் அனுமதி இல்லை. ஆனால், தடையின்றி பார் நடப்பதுடன் இரவு பகலாக மது விற்பனையும் நடக்கிறது. இந்த அனுமதிக்கப்படாத பார்களிலும் அரசுக்கு வரவேண்டிய தொகையை விட 2 மடங்கு கூடுதல் கட்டணத்தை யாரோ வசூல் செய்து செல்கிறார்கள். அதனால் எந்த அதிகாரியும் கண்டுகொள்வதில்லை. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது.

 

சில நாட்களுக்கு முன்பு ஆலங்குடி சப்-டிவிசன் வடகாடு காவல் எல்லையில் உள்ள வானக்கண்காடு டாஸ்மாக் கடையில் அனுமதி இல்லாத பாரில் காலை நேர மது விற்பனையில் ஈடுபட்ட பரிமளம் என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அந்த பாரின் உரிமையாளர் மதியழகன் காவலரை தனது காலணியால் தாக்க முயன்றார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதன் பிறகு அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த வடகாடு காவல் நிலையம், மதியழகனை இன்னும் கைது செய்யவில்லை. 

 

இதே போல அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் அனுமதி இல்லாத பாரில் மது அருந்தும் சிலர், அந்த சாலையின் வழியாக செல்வோரிடம் வம்பிழுத்து அவர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. நேற்று இரவு பஞ்சாத்தி ஆனந்த் என்பவர் தன்னிடம் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கொடுக்க அந்தச் சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது அந்த அனுமதி பெறாத பாரில் மது அருந்திவிட்டு வெளியே வந்த சிலர், ஆனந்தை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை வழிப்பறி செய்துள்ளனர். இதனால், அந்தக் கிராம மக்கள் திரண்டு சாலை மறியல் செய்துள்ளனர்.

 

சாலை மறியலில் இருந்த கிராம மக்கள் கூறும் போது, “அனுமதி பெறாத பாரில் எந்த நேரமும் மது விற்பனை நடக்கிறது. இதனால் அடிக்கடி சட்ட ஒழுங்கு பிரச்சனை நடந்தாலும் போலீசார் கண்டுகொள்வதில்லை. அதன் விளைவு தான் இன்று ஆனந்த் தாக்கப்பட்டது. சாலை மறியலுக்கு பிறகு வந்த போலீசார் தாக்கியவர்களை கைது செய்யாமல் எங்களிடம் வந்து சமாதானம் பேசுகிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள அரசு நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனை போலீசார் தெரிந்தும் தெரியாதது போல உள்ளனர். இதனால் பெரிய விபரீதங்கள் ஏற்படும் முன்பே நடவடிக்கை எடுத்தால் நல்லது” என்றனர். ஆனந்தை தாக்கியவர்களை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்த பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.