Skip to main content

''தப்பா ஊசி போட்டு இப்படி அநியாயமா கொன்னுட்டானுங்களே..." - கதறித் துடித்த பெற்றோர்

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

unjustly by injecting them..." - the crying parents

 

சென்னை மண்ணடியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தங்களின் 15 வயது மகள் இறந்து விட்டதாகக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

 

தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 15 வயதான நந்தினி என்ற மாணவி பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த வாரம் காய்ச்சல் இருந்ததால் மண்ணடியில் உள்ள சென்னை நேஷனல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அவருக்கு அல்சர் பிரச்சனை இருப்பது தெரிய வந்ததால் வயிற்றுப் புண்ணை சரி செய்ய தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டது. பிறகு வயிற்று வலியும் குறைந்ததாகக் கூறப்பட்ட நிலையில் நேற்று மதியம் மருத்துவர்கள் ஒரு ஊசியைச் செலுத்தியுள்ளனர்.அந்த ஊசி செலுத்திய பிறகு நந்தினியின் மார்பு பகுதியில் வலி ஏற்பட்டதாகப் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

 

அந்த ஊசி செலுத்தப்பட்ட பிறகு தங்கள் மகளின் உடலில் பல்வேறு விதமான பின் விளைவுகள் உடனடியாகத் தெரிந்ததாகவும். அது ஏதோ தவறான ஊசி. அந்த ஊசியை எங்களின் எந்த விதமான அனுமதியும் இல்லாமல் எங்களுக்குத் தெரிவிக்காமலே செலுத்திவிட்டனர். அந்த ஊசி செலுத்திய பிறகு எங்களுடைய மகள் வலியால் துடித்தால் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சிறுமியின் தந்தை ரமேஷ் கூறுகையில், ''இன்று காலை எங்களை அழைத்து நந்தினி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டோம். எங்களுடைய மகளின் சாவில் மர்மம் உள்ளது. அது என்ன ஊசி? எதற்காக எங்கள் அனுமதியில்லாமல் செலுத்தினீர்கள். அந்த ஊசியை செலுத்திய பிறகு எங்கள் மகள் வலியால் துடித்தால் எங்களுடைய மகளின் சாவுக்கு இந்த மருத்துவமனையும் மருத்துவர்களுமே முழுப் பொறுப்பு” என்று கூறி மருத்துவமனையில் கதறி அழுது துடித்தார். 15 வயது மகளைப் பறிகொடுத்து விட்டுப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறித் துடித்தது பார்ப்போரை நெஞ்சைப் பதறச் செய்யும் சோகமாக இருந்தது.

 

உறவினர் பையனைக் கட்டி அழுத மாணவியின் தாயார் "உனக்குதானே என் பொண்ண கல்யாணம் செஞ்சி கொடுக்க நினைச்சேன்... இப்படி அநியாயமா கொன்னுட்டானுங்களே..." என்று கூறிக் கதறி அழுதது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பெற்றோர் மற்றும் மருத்துவமனையில் உள்ளவர்களையும் சமாதானம் செய்தனர். இறுதியில் மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகப் பெற்றோர் குற்றம் சாட்டி இருப்பதால் மாணவியின் உடல் அருகில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை நேஷனல் மருத்துவமனையின் மருத்துவர்களிடம் நாம் விளக்கம் கேட்டபோது, “நாங்கள் சரியான சிகிச்சை தான் கொடுத்தோம். எந்த விதமான தவறான சிகிச்சையும் வழங்கவில்லை” என்று விளக்கம் கொடுத்தனர். தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் மாணவியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.