Skip to main content

விரிவுரையாளர்கள் செய்த வேலைக்கு சம்பளம் இல்லை என்று சொல்லும் பல்கலைகழக நிர்வாகம்!

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

தமிழகத்தில் செயல்பட்டு வந்த 14 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை அரசு ஏற்று நடத்தும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதனைத்தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஒரத்தநாடு, அறந்தாங்கி, லால்குடி மற்றும் பெரம்பலூர் உறுப்புக் கல்லூரிகள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகளில் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டன.

 

University administration says no salary to lecturers

 

எனினும் இந்த கல்லூரிகளில் செலவினங்களை பல்கலைக்கழகங்களை ஏற்றுக்கொண்டு பின்னர் அரசிடம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பல்கலைக்கழக ஆளுகைக்குட்பட்ட 4 கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் மணிநேர விரிவுரையாளராக பணியாற்றுபவர்களுக்கு காலநீடிப்பு மற்றும் ஊதியம் தொடர்பாக வழங்குவது தொடர்பான விவரங்கள் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்.

அதில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுவதுடன் சம்பளம் வழங்குவதற்கு ஏதுவாக அவர்களின் வருகைப்பதிவேடு விவரங்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் ஆனால் மணிநேர விரிவுரையாளர்கள் ஜூன் 17 தொடங்கி ஜூன் 30 வரையிலான 17 நாட்களுக்கு மட்டும் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாகவும் அந்த காலகட்டத்திற்கான சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஜூலை மாதம் முழுவதும் அவர்கள் பணியாற்றிய முடிந்தும் இப்போது ஆகஸ்ட் மாதம் தொடங்கும் நிலையில் மணி நேர விரிவுரையாளர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்க பல்கலைக்கழகம் முன்வராததால் மணி நேர விரிவுரையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல 4 அரசுக் கல்லூரிகளிலும் பணியாற்றும் 31 நிரந்தர பேராசிரியர்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஊதிய பரிந்துரைப்படி சம்பளம் வழங்கப்பட எடுக்காதது பேராசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே பணியாற்றி வரும் தற்காலிக பேராசியர்களுக்கு அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு இந்த வரும் மீண்டும் புதிக விண்ணப்பித்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்கிற அறிவிப்பு ஏற்கனவே அதிர்ச்சியில் அளித்த நிலையில் தற்போது பணியாற்றிதற்காக கூலியை இப்படி தராமால் இப்படி விரிவுரையாளர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று புலம்புகிறார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்கத் தடை

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Ban on sale of cotton candy across Tamil Nadu

புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்திருந்தனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை விதிக்கப்பட்டது. அரசிடம் இருந்து முறையான ஒப்புதலோடு விற்பனைக்கான உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் பஞ்சு மிட்டாயை விற்பனை செய்ய வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் பிறப்பித்திருந்தார்.

அதே சமயம் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறையின் சார்பில் சென்னை மாவட்ட அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினர் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் இடங்களில் சோதனை நடத்தி தரமில்லாத மற்றும் ரசாயனம் கலக்கப்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்திருந்தனர்.

மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமைன் பி' என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பிங்க், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிட வேண்டாம் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் ‘ரோடமைன் பி’ உள்ளிட்ட ரசாயனங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பரிந்துரை செய்திருந்தது. 

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பேச்சுவார்த்தையின் நிலவரம் என்ன? - அமைச்சர் சிவசங்கர் பேட்டி

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
'The decision will be taken after discussion tomorrow'- Minister Sivashankar interview

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகக் கடந்த டிசம்பர் மாதம் நோட்டீஸ் வழங்கி இருந்தனர். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இருந்தனர்.

இதற்கான பேச்சுவார்த்தை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும், ஜனவரி 3 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. மேலும் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் போராட்ட அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ''பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்க இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர்கள் அவர்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறார்கள். 15வது ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும், பணிபுரிகின்ற பணியாளர்களுடைய அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுடைய அகவிலைப் படியை உயர்த்தி தருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறார்கள். இதில் நிதி கூடுதலாக செலவாகின்ற சில விஷயங்களை நிதித் துறையோடு கலந்தாலோசித்து, இதுகுறித்து விவாதித்து முடிவு எடுத்த பிறகு தான் அறிவிக்கப்படும் என்ற காரணத்தினால், நாளை ஒருநாள் நேரம் கேட்டிருக்கிறோம். நாளை மறுநாள் மறுபடியும் பேசிய பிறகு விவாதிக்கலாம் என்று சொல்லி இருக்கிறோம். எனவே அவர்களுடைய போராட்ட அறிவிப்பை கைவிடக் கோரி நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. நாளை மறுநாள் பேசி முடிவு எட்டப்படும்'' என்றார்.