Skip to main content

‘வின்டேஜ் ரைபிள்கள் முதல் அட்வான்ஸ்ட் ரைபிள்கள் வரை’ - கண்காட்சியினை துவக்கிவைத்த மத்திய அமைச்சர்!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

Union Minister launches exhibition

 

இந்திய பாதுகாப்பு அமைச்சகமானது 75வது சுதந்திர தினத்தின் ஒருபகுதியாக நாடு முழுவதும் 75 இடங்களில் பாதுகாப்பு தயாரிப்புகளை உள்ளுர் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தியுள்ளனர். இந்தக் கண்காட்சியினை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் 13.12.2021 அன்று காணொளிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். அதன் ஒருபகுதியாக திருச்சி படைகலன் தொழிற்சாலையானது தங்களுடைய தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்பு கருவிகளைப் பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளது.

 

இந்தக் கண்காட்சியினைப் பார்வையிட திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் 15 வகையான வின்டேஜ் ரைஃபிள்கள் இடம்பெற்றுள்ளன. 7.62 எஸ்.எல்.ஆர்.ஏ, பி.கே.டி - ஒஎப்டி 007, பிகேடிஎம், இன்சாஸ், 9 எம்எம் கார்பைன், காஸா ரக துப்பாக்கி உள்ளிட்ட பல ரக துப்பாக்கிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சியில் 2ஆம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஜெர்மன் நாட்டுத் துப்பாக்கியான எம்.ஜி 15 – 7.92 எம்.எம். ரக மெஷின் கன், 1935 இத்தாலியன் மீடியம் மெஷின் கன், 303 எம்.கே.ஒன் லைட் மெஷின் கன், திருச்சி அசால்ட் ரைஃபிள் உள்ளிட்ட துப்பாக்கி ரகங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, வண்ணம் பூசி புதுப்பொலிவுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

Union Minister launches exhibition

 

அதேபோல், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்ஆர்சிஜி எனப்படும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் செயல்படும் தானியங்கி ரக துப்பாக்கியும் இதில் இடம்பெற்றிருந்தது. இஸ்ரேல் மற்றும் இந்திய நாடு இணைந்து கூட்டு முயற்சியில் ஸ்டெபிலைஸ்டு ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரக துப்பாக்கியானது ஒரு நிமிடத்திற்கு 600 தோட்டாக்கள் வரை வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 முதல் 5 கி.மீ. தூரம்வரை எதிரிகளை லேசர் மூலம் குறிவைத்து தாக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரக தானியங்கி துப்பாக்கியானது கப்பல் படையில் போர்க் கப்பல்களில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

 

இங்கு உற்பத்தியாகும் பாதுகாப்பு கருவிகள் அனைத்தும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதில் இராணுவம் மட்டுமின்றி அனைத்து பாதுகாப்பு படைகளும் பயன்படுத்தும்படியாக உள்ளது. இந்தக் கண்காட்சியின் நோக்கம் குறித்து படைகலன் தொழிற்சாலையின் ஊழியர்கள் கூறுகையில், “படைகலனில் உற்பத்தியாகும் கருவிகள் எது என்பதை சிறுவர்கள் முதல் பொதுமக்கள் வரை தெரிந்துகொள்ளவும், அவற்றின் தொழில்நுட்பங்களை மாணவர்கள் பார்க்கும்போது அவர்களுக்கு புதிய சிந்தனை உருவாகும். அந்தப் புதிய சிந்தனை, நவீன கருவிகளின் வளா்ச்சிக்கு அடித்தளமாக மாறும்” என்று கூறினார்கள்.

 

Union Minister launches exhibition

 

அதேபோல் இராணுவத்தில் எந்த ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவும், அவற்றின் தன்மை, செயல்பாடு, நுட்பங்கள் உள்ளிட்டவற்றை முழுமையாக தெரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் ஓரளவிற்கு இந்தக் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள முடியும். இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளுக்கும் அந்தக் கருவியின் பெயர், அதன் எடை, அதன் ரகம், அதன் இலக்கு எவ்வளவு என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், படைகலன் ஊழியர்களும் துப்பாக்கி ரகங்கள் குறித்து பார்வையாளா்களுக்கு விளக்கமளித்துவருகின்றனர். எனவே இளைஞா்களுக்கு இராணுவத்தின் மீதான ஒரு ஆர்வத்தைத் தூண்டுவிதமாக இந்தக் கண்காட்சி அமையும். இராணுவம் மட்டுமின்றி கப்பல் படை, விமானப்படை உள்ளிட்டவற்றில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளைத் தேட ஒரு உந்துதலாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.