Skip to main content

‘வின்டேஜ் ரைபிள்கள் முதல் அட்வான்ஸ்ட் ரைபிள்கள் வரை’ - கண்காட்சியினை துவக்கிவைத்த மத்திய அமைச்சர்!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

Union Minister launches exhibition

 

இந்திய பாதுகாப்பு அமைச்சகமானது 75வது சுதந்திர தினத்தின் ஒருபகுதியாக நாடு முழுவதும் 75 இடங்களில் பாதுகாப்பு தயாரிப்புகளை உள்ளுர் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தியுள்ளனர். இந்தக் கண்காட்சியினை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் 13.12.2021 அன்று காணொளிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். அதன் ஒருபகுதியாக திருச்சி படைகலன் தொழிற்சாலையானது தங்களுடைய தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்பு கருவிகளைப் பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளது.

 

இந்தக் கண்காட்சியினைப் பார்வையிட திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் 15 வகையான வின்டேஜ் ரைஃபிள்கள் இடம்பெற்றுள்ளன. 7.62 எஸ்.எல்.ஆர்.ஏ, பி.கே.டி - ஒஎப்டி 007, பிகேடிஎம், இன்சாஸ், 9 எம்எம் கார்பைன், காஸா ரக துப்பாக்கி உள்ளிட்ட பல ரக துப்பாக்கிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சியில் 2ஆம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஜெர்மன் நாட்டுத் துப்பாக்கியான எம்.ஜி 15 – 7.92 எம்.எம். ரக மெஷின் கன், 1935 இத்தாலியன் மீடியம் மெஷின் கன், 303 எம்.கே.ஒன் லைட் மெஷின் கன், திருச்சி அசால்ட் ரைஃபிள் உள்ளிட்ட துப்பாக்கி ரகங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, வண்ணம் பூசி புதுப்பொலிவுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

Union Minister launches exhibition

 

அதேபோல், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்ஆர்சிஜி எனப்படும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் செயல்படும் தானியங்கி ரக துப்பாக்கியும் இதில் இடம்பெற்றிருந்தது. இஸ்ரேல் மற்றும் இந்திய நாடு இணைந்து கூட்டு முயற்சியில் ஸ்டெபிலைஸ்டு ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரக துப்பாக்கியானது ஒரு நிமிடத்திற்கு 600 தோட்டாக்கள் வரை வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 முதல் 5 கி.மீ. தூரம்வரை எதிரிகளை லேசர் மூலம் குறிவைத்து தாக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரக தானியங்கி துப்பாக்கியானது கப்பல் படையில் போர்க் கப்பல்களில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

 

இங்கு உற்பத்தியாகும் பாதுகாப்பு கருவிகள் அனைத்தும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதில் இராணுவம் மட்டுமின்றி அனைத்து பாதுகாப்பு படைகளும் பயன்படுத்தும்படியாக உள்ளது. இந்தக் கண்காட்சியின் நோக்கம் குறித்து படைகலன் தொழிற்சாலையின் ஊழியர்கள் கூறுகையில், “படைகலனில் உற்பத்தியாகும் கருவிகள் எது என்பதை சிறுவர்கள் முதல் பொதுமக்கள் வரை தெரிந்துகொள்ளவும், அவற்றின் தொழில்நுட்பங்களை மாணவர்கள் பார்க்கும்போது அவர்களுக்கு புதிய சிந்தனை உருவாகும். அந்தப் புதிய சிந்தனை, நவீன கருவிகளின் வளா்ச்சிக்கு அடித்தளமாக மாறும்” என்று கூறினார்கள்.

 

Union Minister launches exhibition

 

அதேபோல் இராணுவத்தில் எந்த ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவும், அவற்றின் தன்மை, செயல்பாடு, நுட்பங்கள் உள்ளிட்டவற்றை முழுமையாக தெரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் ஓரளவிற்கு இந்தக் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள முடியும். இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளுக்கும் அந்தக் கருவியின் பெயர், அதன் எடை, அதன் ரகம், அதன் இலக்கு எவ்வளவு என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், படைகலன் ஊழியர்களும் துப்பாக்கி ரகங்கள் குறித்து பார்வையாளா்களுக்கு விளக்கமளித்துவருகின்றனர். எனவே இளைஞா்களுக்கு இராணுவத்தின் மீதான ஒரு ஆர்வத்தைத் தூண்டுவிதமாக இந்தக் கண்காட்சி அமையும். இராணுவம் மட்டுமின்றி கப்பல் படை, விமானப்படை உள்ளிட்டவற்றில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளைத் தேட ஒரு உந்துதலாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.