Advertisment

இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக தாக்கி, தொற்று பரவலின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. அதன் பிறகு அந்தந்த மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையினால் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது. அதேவேளையில், கரோனா தடுப்பூசியும் கரோனாவிலிருந்து தற்காத்துகொள்ள பெரும் பங்காற்றிவருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், மதுரவாயிலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நேரில் சென்று பார்வையிட்டார்.