தமிழக காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் 'சிறப்புச் செயல்பாட்டுப் பதக்கம்' (Union Home Minister's Special Operation Medal) அறிவிக்கப்பட்டுள்ளது.
2020- ஆம் ஆண்டிற்கான, மத்திய உள்துறை அமைச்சரின் 'சிறப்புச் செயல்பாட்டுப் பதக்கம்' வழங்கப்படும் அதிகாரிகளின் பெயர்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளா, டெல்லி, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் என்.கண்ணன், ஜே.மகேஷ் மற்றும் எஸ்.பிஅரவிந்த், டி.எஸ்.பிபண்டரிநாதன், காவல் ஆய்வாளர் எம்.தாமோதரன் ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் 'சிறப்புச் செயல்பாட்டுப் பதக்கம்' அறிவிக்கப்பட்டுள்ளது.