தமிழகம் வந்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், சென்னையில் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகையை நேரில் ஆய்வு செய்தார். பின்பு பெரிய மேட்டில் உள்ள மத்திய அரசின் மருந்து சேமிப்பு கிடங்கை ஆய்வு செய்த பின், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் தொடர்ச்சியாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.