Published on 12/01/2022 | Edited on 12/01/2022

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு சீருடைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் புத்தாடை மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி துவக்கிவைக்கப்பட்டன. இதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, தொடங்கி வைத்தார். கோவிலில் பணியாற்றக்கூடிய அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.