ADVERTISEMENT

ரிப்பன் மாளிகையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்... போலீசார் விசாரணை!

12:59 PM Jun 25, 2019 | kalaimohan

சென்னை மாநகராட்சி அலுவலகம் இருக்கக்கூடிய ரிப்பன் பில்டிங் வளாகத்தில் இன்று அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


ADVERTISEMENT

சென்னை ரிப்பன் பில்டிங்கில் உள்ள தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி பொதுஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மேற்கூரையில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் இறந்த நிலையில் கிடப்பதாக பெரியமேடு போலீசாருக்கு தகவல் கிடைக்க, கழுத்தில் டெலிபோன் வயர் சுற்றப்பட்ட நிலையில் இறந்துகிடந்த அந்த அடையாளம் தெரியாத நபரின் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை அருகில் உள்ள ராஜீவ் காந்தி அரசுப்பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


அந்த நபர் யார்? இதுகொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நபர் அங்கு வேலை செய்யும் நபர் அல்ல மேலும் அவர் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT