Skip to main content

வேலைக்காக வந்த இடத்தில் ஏற்பட்ட காதல்... சொந்த ஊருக்குச் சென்ற போது நிகழ்ந்த அசம்பாவிதம்!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

The unfortunate thing that happened when he went to his hometown

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது ப.கொத்தனூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சன்னியாசி என்பவரது மகன் முனியன்(32). இவர் சென்னையில் தங்கி ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த முனியன் என்பவரது மகள் அனிதா(31) இவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருந்துக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறார்கள். ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் இருவரும் அவ்வப்போது சந்தித்து வந்தனர். இந்த சந்திப்பு இருவருக்கும் இடையே காதலாக வளர்ந்துள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டு தங்கள் வீட்டுக்குத் தெரியாமல் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு சென்னையில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

 

இந்த நிலையில் அனிதா தனது பெற்றோரிடம் சொத்தில் பங்கு கேட்டு வந்துள்ளார். இதனால் அனிதாவுக்கும் அவரது அண்ணன் ஆனந்த் வேலுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஆனந்த வேலு கடந்த 12ஆம் தேதி அனிதாவிடம் தொலைப்பேசியில் பேசி சொத்தில் பங்கு பிரிப்பதற்கு ஏற்பாடுகள் தயார் செய்துள்ளோம் அந்தப் பத்திரத்தில் நீ கையெழுத்து போட வேண்டும் எனவே ஊருக்கு புறப்பட்டு வருமாறு அழைத்துள்ளார். அதன்பேரில் நேற்று முன்தினம் ப. கொத்தனூர் கிராமத்தில் உள்ள தனது பிறந்த வீட்டிற்கு அனிதா வந்துள்ளார். அப்போது வீட்டில் அனிதாவின் அண்ணன் ஆனந்தவேல்  அவருடைய மனைவி ஆகிய இருவர் மட்டும் இருந்துள்ளனர். இந்த நிலையில் மதியம் அந்த வீட்டில் தங்கியிருந்த அனிதா மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகக் கூறியுள்ளனர்.

 

இது குறித்து அனிதாவின் கணவருக்கு கூட அனிதா இறந்ததை தெரிவிக்காமல் அவசர அவசரமாக அனிதாவின் உடலை அவரது அண்ணன் ஆனந்தவேலு மற்றும் அவரது உறவினர்கள் அந்த ஊரில் உள்ள சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று எரித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து அனிதாவின் கணவர் முனியன் வேப்பூர் காவல்நிலையத்தில் அனிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திட்டக்குடி டி.எஸ்.பியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள சிவா சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்டு அனிதாவின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.