Skip to main content

பாதாள சாக்கடையை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

கும்பகோணம் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியை தனியார் நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்கள் கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனிற்கு எதிரே உள்ள பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீர் வெளியேறி வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கழிவுநீர் அடைப்பை சரிசெய்யும் பணிக்காக தனியார் நிறுவனத்தில் உள்ள கழிவுநீர் அடைப்பை எடுக்கும் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. 
 

இந்த வாகனத்துடன் ஒப்பந்த தொழிலாளர்கள் குடிதாங்கியை சேர்ந்த ராஜா தலைமையில் வீரமணி மற்றும் மேலக்காவேரி தங்கையா நகரைச் சேர்ந்த சாதிக்பாட்சா (55 வயது) உள்பட 4 பேர் கழிவுநீர் அடைப்பை சரிசெய்வதற்காக பாதாள சாக்கடை கிணற்றில் இறங்கினர். அப்போது சாதிக் பாட்சா விஷ வாயு தாக்கி பாதாள சாக்கடை கிணற்றில் விழுந்தார். பதட்டமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் என்ன செய்வதென புரியாமல் தவித்தனர். பாதாள சாக்கடையில் விழுந்த சாதிக் பாட்ஷாவை இரண்டு மணி நேரமாகியும் வெளியே எடுக்க முடியாமல் தவித்தனர்.

 underground drainage


இந்த தகவலறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழருவி, வழக்கறிஞர்கள் விவேகானந்தன், இளங்கோவன் உள்ளிட்ட சமூக  ஆர்வலர்கள் என 50- க்கும் மேற்பட்டோர் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே அமர்ந்து மீட்புப் பணிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் தகவலறிந்த கும்பகோணம் டிஎஸ்பி இளங்கோவன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன், நகர் நல அலுவலர் பிரேமா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  

 underground drainage


பாதாள சாக்கடையில் விழுந்த சாதிக்பாட்சாவை தீயணைப்பு துறை அதிகாரிகள் தேடினர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு சாதிக்பாட்சாவின் உடலை இறந்த நிலையில் மீட்டனர். பின்பு உடலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழருவி கூறியதாவது, " உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பாதாள சாக்கடையில் இறங்கி கழிவு நீர் சுத்தம் செய்யும் பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்தகூடாது என தடை விதித்துள்ளது. ஆனால் தனியார் ஒப்பந்தக்காரர்கள் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், பாதுகாப்பு கவசங்களும் இல்லாமல், குறைந்த ஊதியத்திற்கு ஒப்பந்த தொழிலாளர்களை பாதாள சாக்கடை துப்புறவு பணியில் ஈடுபடுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். பாதாள சாக்கடையில் இறங்கி பணியில் இருக்கும்போது உயிரிழந்த சாதிக் பாட்சாவின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதி  அளிக்க வேண்டும்.

 underground drainage


நகராட்சி நிர்வாகத்தில் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்தம் செய்யும் பணிக்கு இயந்திர மனிதனான ரோபோட்டை பயன்படுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தற்போது அது பயன்பாடு இல்லாமல் இருந்து வருவது வருந்தத்தக்கது. இது போன்ற மனித உயிர் இழப்பு இல்லாமல் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.