Skip to main content

குப்பைத் தொட்டியில் கிடந்த ஆண் குழந்தை! - பொதுமக்கள் அதிர்ச்சி!

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

The umbilical cord is not cut, the boy lying in the trash

 

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உளுந்தூர்பேட்டையில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலை பிரிந்து செல்கிறது. இந்த ஊரைக் கடந்து தான் தென் மாவட்டங்களில் இருந்தும் மேற்கு மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்குச் சென்று வருவோர்கள் கடந்துசெல்ல வேண்டும். 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும் இந்த ஊரில் உள்ள பஸ் நிலையம் அருகில் உள்ளது அரசு மருத்துவமனை. உளுந்தூர்பேட்டை சுற்றி உள்ள கிராம மக்கள், நோய் வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள்.

 

மேலும் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளில் சிக்கிக் கொள்வோரை மீட்டுக்கொண்டு வந்து இங்கு தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பரபரப்பான மருத்துவமனை அருகில் இருந்த ஒரு குப்பைத் தொட்டியில் உப்பிய நிலையில், ஒரு துணிப்பை கிடந்துள்ளது. அந்த வழியாகச் சென்றவர்கள் இதைப் பார்த்து விட்டு சந்தேகம் அடைந்துள்ளனர். அதனால், காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் உடனடியாக இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று மருத்துவமனையில் இருந்த ஊழியர்களின் உதவியுடன் அந்த குப்பைத் தொட்டியில் கிடந்த துணிப்பை மூட்டையை எடுத்துப் பார்த்துள்ளனர்.

 

அந்த துணிப்பைக்குள் ரத்தக்கறையுடன் பிறந்து சில மணிகளே ஆன தொப்புள் கொடி கூட அறுபடா நிலையில் இறந்து போன நிலையில் ஒரு ஆண் குழந்தை கிடந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள், காவல்துறையினர், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த குழந்தையைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். குழந்தையைக் கொன்று பைக்குள் திணித்து குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றவர்கள் யார் அல்லது வேறு ஏதேனும் காரணமா? குழந்தை சடலமாக இந்த இடத்தில் எப்படி கொண்டுவந்து போடப்பட்டது எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.