Advertisment

“உள்ளேயா எட்டி பாக்குற... இதுதான் உனக்கு தண்டனை” - ஒற்றை பெண்ணாக செவிலில் விட்ட சம்பவம்  

ஈரோடுபேருந்து நிலையத்தில் பெண்கள் கழிவறைக்குள் புகுந்த போதை நபர் ஒருவரைப் பெண் ஒருவர் பிடித்துத்தாக்கி முகத்தில் மிளகாய்ப் பொடி வீசிய சம்பவம் நடந்துள்ளது.

Advertisment

ஈரோடுபேருந்து நிலைய பெண்கள் கழிப்பறைக்குள்மதுபோதையில் இருந்தஇளைஞர் ஒருவர் புகுந்ததாகக் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அங்கிருந்த துணிச்சல் மிகுந்த பெண் ஒருவர் மட்டும் அந்த போதை ஆசாமியைப் பிடித்து கன்னத்தில் பளார் பளார் என்று அறைவிட்டார். அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

வெளியான அந்த வீடியோவில் ''உன் அம்மா தங்கையும் பெண் தானே என ஆவேசமாகக் கேள்வி கேட்டுத்தாக்கிய அந்த பெண், மிளகாய்ப்பொடியை வாங்கி வந்து அந்த இளைஞரின் முகத்தில் கொட்டினார். அந்த இளைஞரோ அலறித் துடித்தார். பின்னர் அங்கு சாதாரண உடையில் பணியிலிருந்த பெண் போலீஸ், சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு சென்று அந்த இளைஞரைப் பிடித்து பேருந்து நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆனால் போலீசார் அந்த இளைஞர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஈரோடு பேருந்து நிலையத்தில் பெண்கள் கழிப்பறை பகுதியில் போதிய மின் விளக்குகள் இல்லாத நிலை இருப்பதால் இதுபோன்ற அச்சுறுத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகக் கூறப்படுகிறது. உரிய வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Erode police Toilet
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe