Skip to main content

உஷ்... பேசக்கூடாது!!! :நிர்மலாதேவி வாய்மூடி மவுனம் !

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

ஒவ்வொரு முறை நீதிமன்றத்திற்கு வரும்போதும் போலிஸாரின் அடக்குமுறைக்கு பயந்து 300 காவலர்கள் புடைசூழ வலம் வரும் நிர்மலாதேவி இந்த முறை பத்திரிகைக்கு பேட்டி கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் தனி ஆளாக  வழக்கறிஞர்கள் கூட இல்லாமல் காரில் வந்திறங்கினார்.

 

nirmaladevi

 

நிமலாதேவி நம்மை பார்த்ததும் சைகையால் தன் வாயை பொத்தி எதுவும் பேசகூடாது.. என காண்பித்து  கோர்ட்டில் ஆஜராக தனி ஆளாக நடந்து செல்ல, காரை ஓட்டி வந்தவர் சார் எதுவும் பத்திரிக்கைக்கு பேசகூடாது என்று வக்கீல் சொல்லியதால்தான் நிர்மலா மேடம் சைகையால் உங்களிடம் அப்படி காண்பிக்கிறார் என்றார். 

 

nirmaladevi

 

 

nirmaladevi

 

மேலும் போனமுறை ஜாமினில் விடுதலை ஆனபோது பொதுவாக பேட்டி கொடுத்தாரே படித்தார்களா? சார் அப்படி எதுவும் இந்தமுறை கொடுக்ககூடாது என்று சொல்லி வந்திருக்கிறார். முழுவதுமாக விடுதலை ஆனபிறகு பேட்டி கொடுப்பார் என்றார் ரவி.

 

அவர் ஜாமினில் வெளிவந்ததிலிருந்து இன்றுவரை அவரது இரண்டு பெண் குழந்தைகளும் அவரை பார்க்க வர வில்லை என்பதாலும், பெரும் நிதி சுமையில் சிக்கியதாலும் கவலை அடைத்துள்ளாராம் நிர்மலா. 

 

                                                                            செய்தியாளர்கள்: சி.என்.ராமகிருஷ்ணன்,அண்ணல் 

                                                                            படங்கள்:ராம்குமார் 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.