Skip to main content

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்; பல லட்சங்கள் கைமாறிதா?-வெளியான திடுக்கிடும் தகவல்கள்!  

Published on 21/09/2019 | Edited on 13/12/2019

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன் இவருடைய மகன் உதித் சூர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நீட் தேர்வில் மும்பையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார் என்ற அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்று விட்டு தேனியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு சேர்ந்து  எம்பிபிஎஸ் படித்து வந்தார். 

இந்த நிலையில் தான் நீட் தேர்வை உதித்சூரியா ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதியதாக தெரியவந்தது அதனடிப்படையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கானாவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து உதித்சூர்யா மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதிய நபர் மீதும் மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதனடிப்படையில் உதித்சூரியா மற்றும்  ஆள் மாறாட்டம் மூலம் நீட் தேர்வு எழுதிய நபரையும் பிடிக்க மூன்று தனிப்படைகளை எஸ்பி பாஸ்கரன் அமைத்தார். 
 

udit surya neet issue


 

அதன் பேரில் அந்த தனிப்படை சென்னைக்கு சென்று தேடி வருகின்றனர் ஆனால் உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் மற்றும் குடும்பத்தார் இந்த விஷயம் தெரிந்து தலைமறைவாகிவிட்டனர் அப்படி இருந்தும்  அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்  வீடுகளிலும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த இச்சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த ஆள்மாறாட்டம் சம்பவம் எப்படி நடந்தது என்ற கேள்வியும் ஒருபுறம் எழுந்துள்ளது.

இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் முதற்கட்டமாக இந்த அசோக் கிருஷ்ணன் என்ற பெயரில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கல்லூரி முதல்வருக்கு மின்னஞ்சல் மூலம் அளித்த புகாரின் பேரில் வெளியே தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மின்னஞ்சல் அனுப்பிய அசோக் கிருஷ்ணன் யார் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் அவருக்கு எப்படி இந்த விவரம் தெரியவந்தது அவரை ஏன் புகார் செய்ய வேண்டும் என்பது போன்ற பல கேள்விகளும் எழுந்துள்ளன.  இதனால் அசோக் கிரூஷ்ணன் அனுப்பிய மின்னஞ்சல் முகவரியை வைத்து தனிப்படை போலீசார் எந்த மின்னஞ்சலில் இருந்து அனுப்பபட்டது என்றும் அனுப்பியவர் குறித்தும் தகவலையும் கண்டறியும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மாணவன் உதித்சூரியாவோ தேனி மருத்துவக் கல்லூரியில் படித்தபோது சக மாணவர்களிடம் தான் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய விவரத்தை உளறியதாகவும் தன்னுடன் மேலும் ஐந்து மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்ததாகவும் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலின் பேரில் உதித் சூர்யா தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தினார்கள் அவருடன் அறையில் தங்கிய சக மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர் அதோடு மருத்துவ துறை அதிகாரிகளும் விசாரணை  நடத்தி வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

மும்பையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து நீர் தேர்வு எழுதியுள்ளார் அந்த தேர்வு மையத்தில் அவருடன் சேர்ந்து மேலும் பலர் பயிற்சி பெற்று தேர்வு எழுதியுள்ளனர் ஆள்மாறாட்டம் செய்வதற்கு பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள் உதவி செய்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். 
இதனால் மும்பை பயிற்சி மையத்திற்கு தனிப்படை போலீசார் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்கு பல லட்ச ரூபாய் கை மாறியதாக கூறப்படுகிறது பயிற்சி மையம் சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் உள்பட  பலருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது எனவே மும்பையில் சம்பந்தப்பட்ட தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டவர்கள் விவரங்களை தனிப்படையினர் சேகரித்து வருகின்றனர். அதுபோல் தேர்வு முடிந்த பின்னர் நடந்த கலந்தாய்வில் உதித் சூர்யாதான் பங்கேற்றார?அல்லது நீட் தேர்வு எழுதிய எழுதிய நபர் பங்கேற்றரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது உதித் சூர்யா கலந்தாய்வில் பங்கேற்று இருந்தால் கலந்தாய்வு நடத்திய அதிகாரிகள் ஹால் டிக்கெட்டில் உள்ள புகைப்படத்திற்கு உதித் சூர்யாவுக்கும் உள்ள வேறுபாட்டை கவனிக்கவில்லையா? அல்லது கலந்தாய்வில் உதித் சூர்யா பங்கேற்காத பட்சத்தில் அவருடைய சான்றிதழ் அடையாள ஆவணங்களை சரிபார்ப்பு பணியின்போது கோட்டை விட்டது ஏன் என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன. 


அதுபோன்று கலந்தாய்வு மற்றும் கலந்தாய்வு முடிந்த பின்னர் உதித் சூர்யாவுக்காக ஆவணங்கள் அடையாள அட்டைகள் போன்றவற்றை மாற்றம் செய்வதற்கான முயற்சிகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது எனவே உதித் சூர்யா மற்றும் ஆள்மாறாட்டம் செய்த நபர் சிக்கினால் தான் பல்வேறு மர்மங்கள் மர்ம முடிச்சுகள் வெளிவரவும் வாய்ப்பு உள்ளது.



மேலும் இந்த ஆள்மாறாட்டம்  சம்பவத்தில்  சில அதிகாரிகளுக்கும்  தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் மாணவர் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனும் தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரனும் சென்னையில் சில  ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வேலை பார்த்ததால் இருவரும் நண்பர்களாக இருந்தும் இருக்கிறார்கள். இதனால் இந்த வழக்கில் உயர்மட்ட விசாரணை நடத்தப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது இப்படி மத்திய அரசு நடத்திய நீட் தேர்வில் நடந்த  முறைகேடு தொடர்பாக இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றவும் வாய்ப்பு உள்ளது என்ற பேச்சும் பரவலாக எதிரொலித்து வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.