Skip to main content

'நான் ஸ்கூல் படித்த காலத்திலேயே அவர் இதைத்தான் சொன்னார்' - ரஜினியை மறைமுகமாக சாடிய உதயநிதி!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பத்திரிக்கையை ஒருவர் படித்தால் அவர் அறிவாளி என்றும், முரசொலி கையில் வைத்திருந்தால் அவர் திமுககாரர் என்றும் கூறினார். அதுமட்டும் இல்லாமல் பெரியாரின் போராட்டத்தில் ராமருக்கு செருப்பு மாலை போடப்பட்டது என்று தெரிவித்தார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வாறு பேசியதற்கு ரஜினி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பெரியார் ஆதரவாளர்கள், அவர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர். இருந்த போதிலும் கூட ரஜினி, தான் ஆதாரத்தோடுதான் பேசியுள்ளேன். மன்னிப்புக்கேட்க முடியாது என்று தெரிவித்துவிட்டார்.

 

udhayanidhi stalin about rajini

 



இதற்கிடையில் ரஜினியின் இந்த கருத்திற்கு ட்விட்டரில் பதில் அளித்த நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி, "முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா என கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு' என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன்" என்று தெரிவித்திருந்தார். ரஜினியை உதயநிதி ஸ்டாலினை வைத்து திமுக உரசி பார்க்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். மேலும் இப்படி விமர்சிப்பது உதயநிதிக்கு அரசியல் வளர்ச்சியை தரும் என்று திமுக நம்புவதாகவும் கூறியினர். 

இந்நிலையில், வடலூரில் ஒரு விழாவில் கலந்த கொண்ட உதயநிதி ஸ்டாலின், விழா முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேதினார். அப்போது, அரசியலுக்கு வருவதாக எனது பள்ளிக்காலத்தில் இருந்தே நடிகர் ஒருவர் கூறி வருகிறார் என ரஜினியை மறைமுகமாக விமர்சித்தார். பின்னர் தி.மு.க. வினர் யாரும் கவலைப்பட வேண்டாம். தமிழகத்தில் பாரதிய ஜனதா துணையுடன் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றிட தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர் என்று தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வடசென்னை தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24) வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்குகள் கேட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெரம்பூர் லட்சுமி அம்மன் கோவில் அருகில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Next Story

தென்சென்னை தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி வாக்கு சேகரிப்பு (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24) தென் சென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்