Udhaya train service cancellation extension!

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது. இந்தப் பருவமழையால் பல்வேறு இடங்களிலும் தண்ணீர் அதிகமாகத் தேங்கியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான நீர் நிலைகளும் நிரம்பி ஓடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் தரைப்பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயில் சேவையானது டிசம்பர் 7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஏற்கனவே நவம்பர் 30-ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் டிசம்பர் 7-ம் தேதி வரை ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.