கரோனாவின் தீவிர பரவலால் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதனால் அரசும், மருத்துவர்களும் தொடர்ந்து அனைத்து மக்களையும் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அதன்பின்னர் தனியார் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் ரூபாய் இரண்டு லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.
கரோனா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின்..! (படங்கள்)
Advertisment