Skip to main content

ஒரே பள்ளியை சேர்ந்த 4 மாணவிகளுக்கு டைபாய்டு; திருவாரூரில் பரபரப்பு

Published on 15/08/2023 | Edited on 15/08/2023

 

Typhoid for 4 students belonging to the same school; excitement in Thiruvarur

 

ஒரே பள்ளியில் பயின்று வந்த நான்கு மாணவிகளுக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

திருவாரூர் தெற்கு வீதியில் செயல்பட்டு வரக்கூடிய ஜி.ஆர்.எம் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகளுக்கு அதிக அளவில் காய்ச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 16 உள் நோயாளிகளில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகளும் அடங்குவர். மேலும் இந்த ஒருவார காலத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

 

மாணவிகள் அனைவருக்கும் டைபாய்டு காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆறாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவி ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ச்சியாக ஒரே பள்ளியைச் சேர்ந்த மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருவதால் பள்ளியின் குடிநீர் வசதிகளை ஆய்வு செய்ய மாவட்ட சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.