Skip to main content

இளைஞர்கள் படுகொலை; காதல் விவகாரத்தில் உறவினர்கள் வெறிச்செயல்

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

Two youths were passed away in a love affair

 

காதல் விவகாரத்தில் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் உயிரிழந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த இருவரது உடல்களை கொலையாளிகள் துறையூர் பகுதிக்கு எடுத்துச் சென்று பாலங்களுக்கு கீழே வீசிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

 

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கொத்தம்பட்டி குண்டாற்று பாலம் அருகில் நேற்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதே போல் ஜம்புநாதபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் உள்ள ராயனேரி ஓடப் பாலத்தின் அடியில் இதே முறையில் சுமார் 45 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவரும் பலத்த வெட்டுக்காயுடன் இறந்து கிடப்பது கண்டுபிடித்து இரண்டு உடல்களையும் மீட்ட போலீசார் துறையூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுமதித்து இறந்தவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்நிலையில் துறையூர் அருகே இறந்தவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரத்தநாடு பகுதியில் உள்ள நெடுவகோட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்த காத்தலிங்கம் என்பவரது மகன் பிரபு (42) என்பதும், ஜம்பனாதபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இறந்து கிடந்தவர் இளங்கோவன் மகன் ஸ்டாலின் என்பதும் அவரும் நெடுவகோட்டைப் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் ரத்த கரையை கண்டுபிடித்தனர். அப்பொழுதுதான் துறையூர் பகுதியில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த இருவரையும் ஒரத்தநாடு பகுதியில் கொலை செய்து துறையூர் பகுதியில் குற்றவாளிகள் வீசி சென்றது தெரிய வந்தது.

 

இதனையடுத்து, ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஹரி(22), சூர்யா(24) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், பிரபு என்பவர் கார் ஓட்டுநர் என்பதும், திருமணம் செய்து விவகாரத்து ஆகி தனியாக வசித்து வருவதாகவும் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அவரது உறவினர்கள் பிரபுவைக் கண்டித்ததாகவும் தெரிகிறது. ஆனால் பெண்ணின் நட்பை பிரபு விட மறுத்துள்ளார். இந்த நிலையில்தான் பிரபுவையும் அவரது நண்பர் ஸ்டாலினையும் பெண்ணின் உறவினர்கள் லாவகமாக கூட்டிச் சென்று தஞ்சாவூர் பகுதியில் கொலை செய்து, பிணத்தை திருச்சி மாவட்டம் துறையூரில் வீசி சென்றது தெரியவந்துள்ளது. காதல் விவகாரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தஞ்சாவூர் - துறையூர் கொத்தம்பட்டி , பொன்னுசங்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்கிடையே உள்ள காவல் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் மற்றும் ரோந்து போலீசார் ஆகியவற்றை மீறி கொலையானவர்களின் உடல்களைக் குற்றவாளிகள் எடுத்துச் சென்றது எப்படி என துறையூர் பகுதி மக்கள் வியப்பில் அதிர்ச்சியிலும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.