Skip to main content

2 சிறுமிகளை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு; வாலிபர்கள் மீது பாய்ந்த போக்சோ!

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

Two youngsters arrested under pocso act in child case

 

பள்ளிபாளையம் அருகே, அக்கா, தங்கை ஆகிய இருவரையும் கடத்திச் சென்று விடுதியில் அடைத்து வைத்து, பாலியல் வன்புணர்வு செய்த இரண்டு இளைஞர்களை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். 

 

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள புதன்சந்தை பேட்டையைச் சேர்ந்தவர் ரீனா (17). இவருடைய தங்கை டீனா (15). (ரீனா, டீனா பெயர்கள் கற்பனையானவை). உள்ளூரில் உள்ள அரசுப்பள்ளியில் ரீனா 12ம் வகுப்பும், டீனா 10ம் வகுப்பும் முடித்துள்ளனர். இருவரும் பொதுத்தேர்வை எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தனர். ஏற்கனவே தந்தையை இழந்துவிட்ட இவர்கள், தாயின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். 

 

கோடை விடுமுறையின்போது, அவர்கள் இருவரும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஜவுளிக்கடைக்கு வேலைக்குச் சென்று வந்தனர். கடந்த சனிக்கிழமை (ஜூன் 18) காலையில் வழக்கம்போல் வேலைக்குச் சென்றனர். வேலை முடிந்து இரவு 8.30 மணிக்கு கடையில் இருந்து கிளம்பிய அவர்கள், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மகள்களை காணாததால் அதிர்ச்சி அடைந்த தாயார், பல இடங்களில் தேடி பார்த்தார். அவர்களுடைய தோழிகளுக்கும், வேலை செய்து வரும் ஜவுளிக்கடைக்கும் அலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். ஆனால் மகள்கள் எங்கு சென்றனர் என்ற விவரங்கள் தகவல்கள் கிடைக்கவில்லை.


இந்த பரபரப்பான நிலையில் காணாமல் போன சிறுமிகளின் தாயாரின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்ட ஒருவர், மகள்கள் இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டார்களா? என்று மட்டும் கேட்டுவிட்டு பேச்சைத் துண்டித்து விட்டார். இதனால் மேலும் பதற்றம் அடைந்த சிறுமிகளின் தாயார், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையினர், சிறுமிகளின் தாயாரிடம் பேசிய அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. 


விசாரணையில், அந்த அலைபேசி எண், அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (21) என்பவர் பெயரில் பதிவாகி இருப்பது தெரிய வந்தது. அந்த இளைஞர் மேல்நிலைத்தொட்டி சுத்தம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதை கண்டறிந்தனர். சந்தேகத்தின்பேரில் சந்தோஷை பிடித்து விசாரித்தபோது, அவரும், அவருடைய நண்பர் வினோத் என்பவரும் சேர்ந்து, தாங்கள் வேலை செய்து வரும் நிறுவனத்தின் காரில் ரீனா மற்றும் டீனாவை கடத்திச்சென்று, நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது. 


இதையடுத்து பள்ளிபாளையம் காவல்நிலைய காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து நாமக்கல் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) அதிகாலையில், நாமக்கல் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட விடுதிக்கு விரைந்து சென்று, இரண்டு சிறுமிகளையும் மீட்டனர். சந்தோஷ், வினோத் ஆகிய இருவரிடமும் நடத்திய தீவிர விசாரணையில், இவர்கள் இருவரும் சிறுமிகளுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்கள் என்பதும், சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் சிறுமிகளை மடக்கிய இளைஞர்கள் இருவரும் அவர்களை காரில் கொண்டு சென்று வீட்டில் இறக்கி விட்டுவிடுவதாகக் கூறி அழைத்துள்ளனர். 


அதை நம்பி காரில் ஏறிய சிறுமிகளை நாமக்கல்லில் உள்ள விடுதிக்கு அழைத்துச்சென்று அடைத்து வைத்து, பாலியல் வன்புணர்வு செய்துள்ளது தெரியவந்தது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றம் என்பதால், தொடர் விசாரணைக்காக இளைஞர்கள் இருவரும் திருச்செங்கோடு மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சிறுமிகளுக்கு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது.


அக்கா, தங்கை இருவரையும் கடத்திச் சென்று விடுதியில் அடைத்து வைத்து வன்புணர்வு செய்த இரண்டு இளைஞர்கள் மீதும் போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். 


கைதான இருவரையும், காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் நாமக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.