Skip to main content

கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரண்டு பெண்கள் தீக்குளிக்க முயற்சி – பதட்டமான போலீஸார்

Published on 15/10/2019 | Edited on 15/10/2019

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்வு கூட்டம் வழக்கம் போல் அக்டோபர் 14ந்தேதி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துக்கொண்டு தங்களது கோரிக்கை மனுவை தந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலத்துக்கு மனு தர வருபவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள். இவர்கள் அங்குள்ள சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு தந்தும் தங்களது கோரிக்கை தீர்க்கப்படாமலே இருப்பதாலே உயர்அதிகாரிகள் நிறைந்த மனுநீதி நாள் முகாமுக்கு வருகின்றனர்.

 

 Two women try to set fire to the collector's office complex - nervous policemen


இங்கு வந்து மனு தந்தும் தங்களது கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதபோது, மீண்டும் மீண்டும் மனு தந்தும் தங்கள் மனுவின் மீது பாரபட்சம் காட்டுவதால் தீக்குளித்து உயிர் விட முயல்கின்றனர். சிலர் உயிரும் விட்டுள்ளனர். இதனால் மனுநீதி நாளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழையும் பொதுமக்களை சோதனை செய்தே அனுப்புகின்றனர். அதனையும் மீறி சிலர் தீக்குளிக்க முயல்கின்றனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருபெண்மணி, நுழைவாயிலில் ஒரு பெண்மணி என இருவர் தீக்குளிக்க தங்கள் மீது மண்ணெண்ணய் ஊற்றிக்கொள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை அடுத்த பழைய மல்லவாடியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவரது கணவர் முனுசாமி. சில ஆண்டுகளுக்கு முன்பு முனுசாமி இறந்துள்ளார்கள். இவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக அந்த கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் வீடுக்கட்டி வாழ்ந்து வருகின்றனர். நீர்நிலையற்ற பகுதிகளில் அரசு பொறம்போக்கு நிலங்களில் வாழ்பவர்களுக்கு பட்டா தரலாம் என அரசாங்கம் சொல்லியதை தொடர்ந்து இவர்களும், தெரிந்தவர்கள் மூலமாக பட்டா வேண்டி மனு செய்துள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ளாத அதிகாரிகள் தர முடியாது எனச்சொல்லியுள்ளார்கள். பலமுறை மனு தந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தனது மகளுடன் வந்து மண்ணெண்ணய் தன் மீது ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொள்ள முயன்றார். அதற்குள் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 Two women try to set fire to the collector's office complex - nervous policemen

 

ஆட்சியர் அலுவலக வாயிலில் பாதுகாப்புக்கு, சோதனை செய்ய போலீஸார் நிற்கும் நிலையில் எப்படி அலுவல வளாகத்துக்குள் சென்று தன் மீது மண்ணெண்ணய் ஊத்திக்கொண்டு தீக்குளிக்க முயன்றார் என போலீஸாரிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்ப பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடிவிட்டனர். அதன்பின் சோதனையை தீவிரப்படுத்தினர்.

இதேபோல் செங்கம் பகுதியை சேர்ந்த மற்றொரு பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலிலேயே தீக்குளிக்க முயல, அவரை பாதுகாப்புக்கு நின்றுயிருந்த போலீஸார் மடக்கி பிடித்தனர், அவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.