Skip to main content

விருத்தாசலம் அருகே சாலை விபத்தில் 2 பெண்கள் பலி, 4 பேர் படுகாயம்

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
Two women killed in road accident, 4 injured


விருத்தாசலம் அருகே வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகள் 2 பெண்கள் பலி, 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
 

விழுப்புரம் மாவட்டம் காட்டு நெமிலியை சேர்ந்த ராணி மற்றும் அரசிளங்குமாரி ஆகிய இருவரும் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள். வழக்கம்போல் வேலைக்காக சென்றவர்கள் விருத்தாசலம் அருகேயுள்ள பெரியவடவாடி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். 
 

அப்போது விருத்தாசலத்திலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதிவிட்டு சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே ராணி என்பவர் பரிதாபமாக உயிரிழிந்தார். அடிபட்ட அரசிளங்குமரி  விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழிந்தார். 
 

இந்த இருவர் அடிபட்ட செய்தி கேட்டு பார்ப்பதற்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் வந்த அவர்களது உறவினர்களான  மணி, முருகன்  ஆகிய இருவரும்  விருத்தாசலம் ரயில்வே மேம்பாலத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த அடியுடன் காயம் எற்பட்டது. இவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் மணி என்பவர் மேல் சிக்கிச்சைக்காக முண்டியாம்பாக்கம் கொண்டு செல்லப்பட்டார்.
 

இதேபோல் விருத்தாசலம் அடுத்த கோபுராபுரம் கிராமத்தில் உள்ள டீக்கடைக்கு கொத்தாலி மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும் சென்றிருந்தனர். அப்போது விருத்தாசலத்திலிருந்து வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்தது. அதில் டீ அருந்தி கொண்டு இருந்த இருவரும் பலத்த காயத்துடன், சுய நினைவை இழந்தனர். பின்னர் அவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு சென்றனர்.
 

தொடர் கதையாகி வரும் வாகன விபத்துக்கு சாலையோர எச்சரிக்கை பலகைகள், கிராமங்களில் தெரு விளக்குகள் சரிவர அமைக்கப்பாடததே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் போதுமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் விருத்தாசலம் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருவதால்தான் உயிரிழப்புகள் அதிகரிக்கிறது என்றும் புகார் கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு விரைவாக செயல்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

மத்திய அமைச்சரின் கார் கதவை திறந்ததால் விபத்து; பா.ஜ.க தொண்டருக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
 Tragedy of BJP worker on Union minister's car door opened in accident

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.  ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

பெங்களூர் வடக்கு உள்பட 14 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஷோபா, தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தின் போது, கார் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ஷோபா, நேற்று (08-04-24) காலை வழக்கம்போல், தனது காரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரது கார், கே.ஆர்.புரம்  பகுதியில் உள்ள கோவில் அருகே சென்று போது, ஷோபாவின் கார் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, தன்பக்கம் இருந்த கார் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது, மத்திய அமைச்சரின் காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மத்திய அமைச்சர் காரின் கதவி மீது மோதினார். இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த அவர் சாலையிம் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, கீழே விழுந்த அவர் மீது ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்து அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஆர்.புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விபத்தில் பலியானவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (55), என்பதும், பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டரான பிரகாஷ், தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. மத்திய அமைச்சர் ஷோபாவின் கார் கதவை திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.