Skip to main content

மதுபாட்டில்களை கடத்தி வந்த பெண்கள்... கையும் களவுமாக பிடித்த போலீசார்...!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

புதுச்சேரியில் இருந்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் பஸ்களின் மூலம் மது பாட்டில்கள் கடத்துவது என்பது தொடர் சம்பவங்களாக நடைபெற்றுவருகிறது. காவல்துறையும் அப்படி கடத்துபவர்களை அவ்வப்போது பிடித்து வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பி வருகிறது. ஆனாலும் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

 

two women arrested

 



புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டம் மொளசூரை சேர்ந்த வள்ளி, ஆயத்துறை சேர்ந்த மேரி ஆகிய இரு பெண்களும் 340 மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளனர். இவர்களைப் பார்த்து சந்தேகமடைந்த எஸ்ஐ கலையரசன் பிரகாஷ் ஆகியோர் இவர்களிடம் பெண் போலீசாரைக் கொண்டு சோதனை நடத்தியதில் மதுபாட்டில்கள் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். 

இது குறித்து காவல்துறையை சேர்ந்தவர்கள் நம்மிடம் கூறும்போது, "உயிரை குடிக்கும் மதுவை பெண்களே கடத்தி வந்து விற்பனை செய்வது வேதனையாக உள்ளது. இப்படிப்பட்டவர்களைக் கையும் களவுமாக பிடித்து அவ்வப்போது வழக்குப் போட்டாலும் கூட நீதிமன்றம் மூலம் ஜாமினில் வந்து மீண்டும் மீண்டும் மதுபாட்டில்கள் கடத்தி வருகின்றனர். இதற்காகவே மாவட்டத்தில் பலரை குண்டர் சட்டத்தில் கூட சிறைக்கு அனுப்பி உள்ளோம். அதையும் மீறி கூட மது கடத்தல் தொடர்கிறது. அது எங்களால் முடிந்த அளவு கட்டுப்படுத்தி வருகிறோம்" என்கிறார்கள். 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.