ADVERTISEMENT

காவிரி உரிமை மீட்புக்காக இருசக்கர வாகன பரப்புரை பயணம் : பி.ஆர்.பாண்டியன் தகவல்

03:49 PM Apr 24, 2018 | rajavel


ADVERTISEMENT

காவிரி உரிமை மீட்பு தமிழகம் தழுவிய இருசக்கர வாகன பரப்புரை பயணம் நாளை வேதாரண்யத்தில் புறப்படுகிறது என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

காவிரி மேலாண்மை வாரியம் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை பின்பற்றி உச்சநீதிமன்றம் உத்திரவை ஏற்று அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் நாளை 25ந் தேதி காலை 8 மணிக்கு வேதாரண்யம் இராஜாஜி பூங்கா அருகிலிருந்து பரப்புரை பயணம் எனது தலைமையில் காலை 8 மணிக்கு புறப்படுகிறோம். மணிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன்அன்சாரி எம்எல்ஏ துவக்கி வைக்கிறார்.

விவசாயிகள் சங்கம், அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட சேவை அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மறுமலர்சி திராவிட முன்னேற்றக் கழகம் முழு ஆதரவளிப்பதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது.


10 மணி திருத்துறைப்பூண்டி,
11 மணி மன்னார்குடி

12 மணி வடுவூர்

4 மணி தஞ்சாவூர்

5 மணி பூதலூர்

6 மணி திருக்காட்டுப்பள்ளி

7 மணி கல்லனை

8 மணி ஸ்ரீரங்கம் தங்கல்.

26ந் தேதி காலை 7 மணி திருச்சி

8 மணி முக்கொம்பு

9 மணி தொட்டியம்

11 மணி கரூர்

12. மணி ஈரோடு

5 மணி சேலம்

7 மணி மேட்டூர் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்கும் பொதுக்கூட்டம்.

27 ந் தேதி காலை 8 மணி தொப்பூர்

10 மணி தர்மபுரி

11 மணி போச்சம்பள்ளி

12 மணி மத்தூர்

5 மணி வாணியம்பாடி

6 மணி ஆம்பூர்

7 மணி வேலூர்
மணித நேய மக்கள் கட்சி பொதுசெயலாளர் அஸ்லாம் பாஷா EXMLA கலந்துக் கொள்ளும் பொதுக் கூட்டம்

28ந் தேதி காலை 8 மணி காஞ்சிபுரம்

9 மணி ஸ்ரீபெரும்புதூர்

10 மணி பூவிருந்தமல்லி

11 மணி சென்னை

உலக தமிழர் பேரமைப்புத் தலைவர் அய்யா பழ நெடுமாறன், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏஎம்.விக்கிரமராஜா சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், தங்கர்பச்சான், ஆரி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கண்டன கூட்டத்தில் பங்கு
பெறுகிறார்கள்.



மாலை 4 மணி திருப்போரூர்

5 மணி மகாபல்லிபுரம்

7 மணி மரக்காணம்


29 ந் தேதி காலை
8 மணி பாண்டிச்சேரி

9 மணி கடலூர்

11 மணி சிதம்பரம்

11.30 மணி கொள்ளிடம்

12 மணி சீர்காழி

4 மணி மயிலாடுதுரை

5 மணி காரைக்கால்

6 மணி நாகப்பட்டினம்

7 மணி திருவாரூர் நகரில் மனுநீதி கொடுத்த மண்ணில் முடிவடைகிறது. இதற்க்கான ஏற்பாடுகளை பொது செயலாளர பாலாறு வெங்கடேசன், தீட்சதர் பாலு, பொருளாளர் ஸ்ரீதர், தஞ்சை புண்ணியமூர்த்தி மண்டல தலைவர்கள் தர்மபுரி சின்னசாமி வேளச்சேரி குமார் தஞ்சை மண்டல தலைவர் டிபி கே.இராஜேந்திரன், கடலூர் விநாயகமூர்த்தி வயலூர் இராஜேந்திரன் காரைக்கால் இராஜேந்திரன் மாவட்ட செயலாளர்கள் நாகை ராமதாஸ்' திருவாரூர் செந்தில்குமார் தஞ்சை மணி திருச்சி ஹேமநாதன் காஞ்சீபுரம் துரைசாமி, சென்னை கோபிநாத், அசோக் ஜிலோதா, சுதா கடலூர் விஜயக்குமார் கொள்ளிடம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் முன்னிலையில் நிர்வாகிகள் பயண வரவேற்பு ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

பயணத்தில் இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள் பங்கேற்கிறார்கள் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT