கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் அறிவு குமார். இவருக்கு வயது 58. இவர் சிதம்பரம் ரயில்வே மேம்பாலம் அருகே பணி நிமித்தமாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென சுருண்டு மயங்கிக் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் மருத்துவமனை உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.