Two tons of Gutka products were set on fire and destroyed

Advertisment

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் காவல்துறையினர் பறிமுதல் செய்த 2- டன் குட்கா பொருட்கள் தீ வைத்து அழிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பெத்தாம் பாளையம் பகுதியில் பெருந்துறை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்த்த மோட்டா ராம், கோபால் ராம் ஆகிய இரண்டு பேரை கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து காவல்துறையினர் கைப்பற்றிய 2- டன் குட்கா பொருட்களை கருமாண்டி செல்லிபாளையம் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் நீதிமன்ற அறிவுறுத்தல் படி வருவாய் துறையினர், காவல்துறையினர், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முன்னிலையில் தீ வைத்து அழித்தனர்.