Advertisment

வழக்கறிஞர்கள் 72 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதியுதவி!

rupees 100

Advertisment

ஊரடங்கினால் நீதிமன்றங்கள் செயல்படாத நிலையில், இளம் மற்றும் பொருளாதரத்தில் பின்தங்கிய 72 வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.2000 வீதம், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள லா அசோசியேசன் நிதியுதவி செய்துள்ளது.

சக வழக்கறிஞர்களிடமிருந்து பெற்ற நன்கொடைகளிலிருந்தே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. நன்கொடை வழங்கி உதவிய அனைத்து வழக்கறிஞர்களுக்கும் லா அசோசியேசன் சார்பில் அதன் தலைவர் எம்.செங்குட்டுவன் மற்றும் செயலாளர் கே.ஜெயராமன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Financial help lawyers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe