Skip to main content

வழக்கறிஞர்கள் 72 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதியுதவி!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020
rupees 100



ஊரடங்கினால் நீதிமன்றங்கள் செயல்படாத நிலையில்,  இளம் மற்றும் பொருளாதரத்தில் பின்தங்கிய 72 வழக்கறிஞர்களுக்கு  தலா  ரூ.2000 வீதம்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள லா அசோசியேசன் நிதியுதவி செய்துள்ளது.   

சக வழக்கறிஞர்களிடமிருந்து பெற்ற நன்கொடைகளிலிருந்தே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. நன்கொடை வழங்கி உதவிய அனைத்து வழக்கறிஞர்களுக்கும் லா அசோசியேசன் சார்பில் அதன் தலைவர் எம்.செங்குட்டுவன் மற்றும் செயலாளர் கே.ஜெயராமன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கேரளாவில் பொருளாதார நெருக்கடி? - உயர்நீதிமன்றம்

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

 High Court questioned Economic crisis in Kerala?

 

கேரளா மாநிலத்தில், கேரளா அரசின் போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த நிதி நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு கடன் கொடுத்த வகையில் ரூ.900 கோடி பணம் இன்னும் திரும்ப வரவில்லை. இதனால், எங்களுடைய நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது. எனவே, அந்த பணத்தை உடனே வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது. 

 

இது தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘அரசு கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. அதனால், போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனத்திற்கு பண உதவி செய்ய முடியாது’ என்று கூறப்பட்டிருந்தது. 

 

இந்த பதில் மனுவை நேற்று (01-11-23) பரிசீலித்த உயர்நீதிமன்றம், கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் உயர்நீதிமன்றம், ‘கேரள அரசின் விளக்கம் கேரளாவை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. அரசின் இந்த விளக்கத்தை வைத்துத்தான் தேசிய அளவில் கேரளா குறித்து பேசப்படும். நிதி நிலைமை மோசமாக இருந்தால், கேரளாவின் பொருளாதார நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டிய நிலை வரும். அதற்கான உரிமை உயர்நீதிமன்றத்திற்கும் உண்டு. அரசு உத்தரவாதத்தை நம்பித் தான் போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனத்தில் பலரும் முதலீடு செய்தனர். கேரளாவில் இந்த நிலை நீடித்தால் முதலீடு செய்ய யாரும் முன்வர மாட்டார்கள். எனவே, அரசு வேறு ஒரு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தது. 

 

 

Next Story

டெல்லியில் தமிழக விஞ்ஞானிகளுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் பாராட்டு

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Lawyers' Association praises  isro scientists in Delhi

 

உலகிற்குத் தமிழால் பெருமை சேர்த்த தமிழ் விஞ்ஞானிகள், வீரமுத்து வேல் (திட்ட இயக்குநர் சந்திரயான் மூன்று விண்கலம்) மற்றும் நிகர் ஷாஜி (திட்ட இயக்குநர் ஆதித்யா எல் 1 விண்கலம்) ஆகியோர் இன்று தில்லி சென்றனர். அவர்களை டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ராம் சங்கர் ராஜா நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

 

தமிழ் உலகம் மட்டுமல்லாமல் விண்ணுலகமும் போற்றும் இடத்தில் தமிழ் விஞ்ஞானிகள் இருவரும் இடம்பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளதாக ராம் சங்கர் வெகுவாகப் பாராட்டினார். இந்திய அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மிகப்பெரிய இயக்குநர் பொறுப்பில் இருக்கும் இந்த இருவரும் தமிழர்கள். சந்திரனுக்கு அனுப்பப்பட்ட ‘சந்திரயான் - 3’ என்ற விண்கலமும் சூரியனுக்கு அனுப்பப்பட்ட ‘ஆதித்யா எல் -1’ என்ற விண்கலமும் உருவாக, நடைமுறைப்படுத்த, வெற்றிகரமாக விண்ணில் செலுத்த அமைக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழுவிற்கு இவர்கள் இருவரும் இயக்குநர்கள் ஆவார்கள். 

 

வீர முத்துவேல் என்ற விஞ்ஞானி தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். விஞ்ஞானி நிகர் ஷாஜி தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இருவரும் உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள் என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை தமிழர்களுக்கும் பெருமை. இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய அரசு நிறுவனம். விண்வெளி ஆராய்ச்சியில் உலக அளவில் நாம் இப்போது முன்னிலை பெற்றுள்ளதற்கு இவர்கள் இருவரின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கது. சந்திரயான் மற்றும் ஆதித்யா விண்கலங்கள் இந்தியாவையும் இந்தியப் பொருளாதாரத்தையும், முதலீட்டையும் அதிகரிக்கும் என்றும் வருங்காலத்தில் அதிக பலன்கள் தரும் என்றும் இருவரும் கூறினர்.

 

உலக நாடுகள் இந்தியாவின் இந்த இரண்டு சாதனைகளை உற்று நோக்கிப் பார்த்து வருவதாகவும் நமது விஞ்ஞானிகளின் அறிவுத்திறனைக் கண்டு வியப்பதாகவும் கூறினார்கள். சந்திரயான் திட்ட இயக்குநர் வீரமுத்து வேல் சந்திரனுக்கு சென்றுள்ள விண்கலம் ‘சந்திரயான் - 3’  நிலவின் மண் மற்றும் இதர கனிம வளங்களை ஆராய்ந்து எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான ஆதாரங்களைச் சேகரித்து வழங்கும் என்று கூறினார். அதேபோல் சூரியனுக்கு சென்றுள்ள ‘ஆதித்யா எல் -1’ விண்கலம் சூரியனின் வட்டப் பாதைகளை ஆராய்ந்து, அதன் கதிர்வீச்சுகளை ஆய்வு செய்து உலக வெப்ப மயமாதல் போன்றவற்றை ஆராய்ந்து சொல்லும் என்று கூறினார். 

 

தமிழகத்தின் இரண்டு தலைசிறந்த விஞ்ஞானிகள் நீடுழி வாழவும் இன்னும் பல்வேறு சாதனைகள் செய்யவும் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக மேலும் மேலும் உயர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாகச் சொல்லி நேரில் சென்று டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ராம் சங்கர் பாராட்டினார். அவருடன் டெல்லி தமிழ்ச் சங்க செயலாளர் முகுந்தன் அவர்களும் கலந்து கொண்டு அவர்களை டெல்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பாகவும் வாழ்த்தினார்.