Skip to main content

ரஜினி சொன்ன இரண்டு காரணங்கள்... ஒன்றை மட்டும் ஏற்றுக்கொண்ட ஆணையம்

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 19 வது கட்ட விசாரணை நேற்று தொடங்கி வருகிற 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த், வழக்கறிஞர் ஹென்றி திபேன் உள்பட 31 பேருக்கு ஒரு நபர் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.

 

 Two reasons Rajini said... Commission accepted only one !!


இதில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜர் ஆவதற்கு விலக்குகோரி தனது வழக்கறிஞர் மூலமாக ஒரு நபர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பேரில் ரஜினிகாந்த் தரப்பில் வழக்கறிஞர் இளம்பாரதி நேற்று ஒரு நபர் ஆணையத்தின் நேரில் ஆஜராகி மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவினை பரிசீலித்த நீதிபதி அருணா ஜெகதீசன் நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று மட்டும் நேரில் ஆஜராக விலக்கு அளித்து பதில் மனு தாக்கல் செய்வதற்கு காலஅவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தார். இது தொடர்பாக ரஜினிகாந்த் தரப்பு வழக்கறிஞர் இளம்பாரதியும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார்.

 

 Two reasons Rajini said... Commission accepted only one !!


இந்த நிலையில் ஒரு நபர் ஆணைய கமிஷன் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அதில், நடிகர் ரஜினிகாந்த் நேற்று ஒரு நபர் கமிஷனில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அவர் நேரில் ஆஜராக விலக்கு கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இரண்டு காரணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒன்று தான் நேரில் வந்து ஆஜராவதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் என்றும், இரண்டாவதாக தொழில்முறை ரீதியாக வேலை இருப்பதால் நேரில் ஆஜராக முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் காரணத்தை ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டாவது காரணத்தின் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று மட்டும் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து முழுவதுமாக விலக்களிக்கப்பட்டதாக வந்த தகவல் தவறானது.

 

 Two reasons Rajini said... Commission accepted only one !!


மீண்டும் வேறொரு நாளில் அவர் நேரில் ஆஜராவதற்கு சம்மன் அனுப்பப்படும். இதற்கிடையில் விசாரணை தொடர்பான பதில் மனுவினை தாக்கல் செய்வதற்கு நடிகர் ரஜினிகாந்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என்பது தொடர்பான விளக்கத்தினை எழுத்துப்பூர்வ ஆவண குறியீடாக தாக்கல் செய்ய மனு அளித்துள்ளோம்.  இது வழக்கமான நடைமுறைதான். அந்த மனுவில் அடுத்த கட்ட விசாரணைக்கு ஆஜராவதற்கான தேதி மீண்டும் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.