ADVERTISEMENT

திருவாரூரில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

11:37 PM Oct 10, 2018 | selvakumar

ADVERTISEMENT

திருவாரூரில் வீட்டின் மேற்கூரையை சரி செய்யும் போது மின்சாரம் தாக்கி வீட்டின் உரிமையாளருடன் கூலி தொழிலாளரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

ADVERTISEMENT

திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட மருதப்பாடி பகுதியில் கீற்று கொட்டகை அமைக்கும் கொத்தனாராக இருப்பவர் பிரபாகர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்தமழையின் காரணமாக மேற்கூரையான சிமெண்டு சீட்டு சேதமடைந்துள்ளது. இந்த சேதத்தை சரி செய்வதற்காக புதுதெருவை சேர்ந்த சுப்பிரமணி என்பவருடன் சோ்ந்து இன்று வீட்டின் மேற்கூரையை சரி செய்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மின் கசிவு இருந்த வயரை சுப்பிரமணியன் பிடித்ததில் மின்சார தாக்கியுள்ளது. இதனை கண்ட பிரபாகர் அவரை காப்பாற்றமுயன்ற போது அவரும் மின்சார தாக்குதலில் சிக்கி இருவரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் இருவரும் மருத்துவமனை வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் மருதப்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT