Skip to main content

ஒரே நாளில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இரண்டு கொலைகள்! பீதியில் திண்டுக்கல் மக்கள்!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

Two person passes away in dindigul at same day people request police to arrest culprits

 

திண்டுக்கல்லைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனை கடந்த 2012இல் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் கொலை செய்தனர். இந்தக் கொலையில் சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திண்டுக்கல் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்துவருகிறது. பசுபதி பாண்டியனை கொலை செய்த சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக நிர்மலா தேவி, ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

 

இந்நிலையில், நேற்று (22.09.2021) காலையில் வழக்கம்போல் 100 நாள் வேலைக்குச் சென்ற நிர்மலா தேவியை பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள், இரண்டு டூ வீலர்களில் எட்டு பேர், திடீரென சூழ்ந்துகொண்டு அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது மட்டுமல்லாமல், நிர்மலா தேவியின் தலையை வெட்டி அதனை பசுபதி பாண்டியன் வீட்டின் கதவு முன்பு போட்டுவிட்டுச் சென்றனர். இந்தக் கொலையில் சம்மந்தப்பட்டுள்ள கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். 

 

Two person passes away in dindigul at same day people request police to arrest culprits

 

இச்சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பரபரப்பு ஓய்வதற்குள், திண்டுக்கல் மாநகரை ஒட்டியுள்ள அனுமந்தராயன் கோட்டை பேருந்து நிறுத்தத்தில் ஸ்டீபன் என்ற இளைஞனின் தலையை மட்டும் வெட்டிக் கொண்டுவந்து ரோட்டில் வைத்துவிட்டு ஒரு கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இந்த விஷயம் அனுமந்தராயன் கோட்டை மக்களுக்குத் தெரியவே, உடனடியாக போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அந்தத் தகவலின் அடிப்படையில், ரோட்டில் கிடந்த ஸ்டீபன் தலையைக் கைப்பற்றிக் கொண்டு அவரது உடலை பல இடங்களில் தேடினார்கள். இறுதியில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வட்டப்பாறை அருகே உள்ள காட்டில் ஸ்டீபனின் உடல் கிடப்பதைக் கண்டு போலீசார் அதைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

 

கொலை செய்யப்பட்ட ஸ்டீபன் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதன் அடிப்படையில் ஏதும் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணையை தொடங்கியிருக்கிறது. இப்படி ஒரே நாளில் ஒரு பெண்ணின் தலையையும் ஆணின் தலையையும் வெட்டி தனித்தனியாக போட்டது திண்டுக்கல் நகரம் மட்டுமல்ல, மாவட்ட அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகல் நேரத்திலேயே இவ்வளவு துணிகரமாக கொலைசெய்து தலையைத் துண்டாக்கி வீதியில் வீசிவரும் கொலையாளிகளைக் காவல்துறையினர் விரைந்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.