Skip to main content

பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் பலி! நீலம் பண்பாட்டுமையம் கண்டனம்!

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

நாகை காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த மாதவன், சக்திவேல் ஆகியோர் நாகை நகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நாகை நம்பியார் நகர் அரசு அலுவலர்கள் சுனாமி குடியிருப்பு அருகே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து நகராட்சி ஓட்டுநர் உதவியுடன் மாதவன், சக்திவேல், வண்டி பேட்டையை சேர்ந்த சந்தீப் ஆகிய மூவரும் சென்று பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

 

Two people passed away by poison gas attack while cleaning sewer

 

அப்போது பாதாள சாக்கடை உள்ளே இறங்கி வேலை செய்த சந்தீப்க்கு விஷவாயு தாக்கி மூச்சு திணறல் ஏற்படவே சாக்கடை உள்ளே இறங்கிய மாதவன், சக்திவேல் ஆகிய இருவரும் சந்தீப்பை காப்பாற்றி மேலே ஏற்றியுள்ளனர். அதனைத்தொடர்ந்து விஷவாயு தாக்கியதால் சக்திவேல் மாதவன் ஆகிய இருவரும் மேலே ஏற முடியாமல் உள்ளேயே சிக்கி மயக்கம் அடைந்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நாகை தீயணைப்புவீரர்கள் மற்றும் காவல்துறையினர் விஷவாயு தாக்கிய மாதவன், சக்திவேல் ஆகியோரை மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே அதிகாரிகளின் அலட்சியத்தால் இரண்டு தொழிலாளர்களும் உயிரிழந்ததாக கூறி நாகை அரசு தலைமை மருத்துவமனையில் திரண்ட உறவினர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வெளிப்பாலையம் போலீசார் உயிரிழப்புக்கு காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Two people passed away by poison gas attack while cleaning sewer

 

இதன் தொடர்பாக பேசிய நீலம் பண்பாட்டுமையம் கூறுகையில், தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக்கொண்டே வருகிறது. இதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை இந்த அரசு எடுத்ததில்லை, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என்று மார்தட்டிக்கொள்ளும் அரசு ஒரு துப்புரவு தொழிலாளிகளுக்கு ஏன் செய்ய மறுக்கிறது. நாகை நகராட்சி ஆணையாளரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.