Skip to main content

பில்டரிடம் பணம் பறித்த போலி பத்திரிகையாளர்கள் இருவர் கைது..!

Published on 27/04/2018 | Edited on 27/04/2018
arrested


சென்னை அடுத்த சேலையூர், எல்.ஐ.சி காலனியை சேர்ந்தவர் ஜீவரத்தினம் (வயது 33). இவர் ஊர்ப்பக்கம் பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 
 

இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் இவரது செல்போனுக்கு தொடர்புகொண்ட சாமி என்பவர் பத்திரிகையில் வேலை செய்வதாக கூறி, உங்கள் நிறுவனத்தில் கட்டப்படும் கட்டிடம் ஒன்று விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அணைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது எனவே பத்திரிகையில் செய்தி வெளியிட போகின்றோம். இந்த செய்தியை வெளியிடக்கூடாது என்றல் ஒரு லட்சம் பணம் கொடுங்கள் என தெரிவித்துள்ளார்.
 

பணத்தை தருவதாக இருந்தால் நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம் பகுதியில் வந்து தொடர்புகொள்ளுங்கள் அங்கு எங்கள் சப்-எடிட்டர் கண்ணன் என்பவரை அனுப்புகின்றோம் அவரிடம் பணம் கொடுங்கள் என கூறியுள்ளார். இதனால் ஜீவரத்தினம் நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம் பகுதிக்கு சென்று அங்கிருந்து சாமிக்கு தொடர்புகொண்டுள்ளார்.
 

அதனைத்தொடர்ந்து சில மணிநேரங்களில் கண்ணன் என்பவர் அங்கு வந்து ஜீவர்தினத்தை சந்தித்து சாமி செல்போனில் கூறியதுபோல் கூறி ஒருலட்சம் பணம் கேட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாய் அதிகமாக உள்ளது என ஜீவரத்தினம் கூற, பின்னர் 15 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என கண்ணன் தெரிவித்துள்ளார்.
 

அதனையடுத்து பணத்தை தயார்செய்துவிட்டு தொடர்புகொள்ளுவதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு வந்த ஜீவரத்தினம் சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 

அப்போது போலீசார் ஜீவராதீனமிடம், சாமிக்கு தொடர்புகொண்டு பணம் தயார்செய்துவிட்டேன் சேலையூர் பகுதியில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என கூறச்சொல்லியுள்ளனர். இதனையடுத்து அதைப்போல ஜீவரத்தினம் சாமியிடம் தெரிவித்துள்ளார்.
 

அதற்கு சாமி கண்ணனை அனுப்புகிறேன் அவரிடம் பணத்தை கொடுத்துவிடுங்கள் என கூறி கண்ணனை சேலையூர் பகுதிக்கு அனுப்பியுள்ளார். அப்போது ஜீவராதீனமிடம், கண்ணன் பணம் பெற முயற்சித்தபோது அங்கு மறைந்து கண்காணித்துக்கொண்டிருந்த போலீசார் கண்ணனை மடக்கிப்பிடித்தனர்.
 

பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்து, அவர் மூலம் சாமியை பிடித்து இருவரிடம் விசாரித்ததில் அவர்கள் சென்னை,எம்.ஜி.ஆர் நகர், விவேகானந்தர் தெருவை சேர்ந்த சாமி (எ) கருப்புசாமி (35), விருகம்பாக்கம், காந்திநகர் பிரதனசாலையை சேர்ந்த கண்ணன் (43) எனவும் இவர்கள் இதேபோல பலரிடம் பத்திரிகையாளர்கள் என கூறி மிரட்டி பணம் பறித்துவந்ததும் தெரியவந்தது.
 

இதனையடுத்து அவர்களை கைதுசெய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.