ADVERTISEMENT

இருவேறு இடங்களில் கிணற்றில் தவறி விழுந்து இருவர் பலி - உறவினர்கள் சோகம்!

03:01 PM Jun 30, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டிவனம் அடுத்த மயிலத்தில் உள்ள பாளைய வீதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் என்பவரது மகன் நந்தகோபால். இவர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று (30.06.2021) மயிலத்தில் உள்ள கோவிலுக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மயிலம் போலீசார் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு படையினர் கிணற்றில் விழுந்து இறந்துகிடந்த நந்தகோபாலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். இதேபோன்று திண்டிவனத்தை அடுத்த இருதயபுரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக ரோஷனை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், கிணற்றிலிருந்த ஆண் சடலத்தை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து விசாரித்தபோது, அவர் அதே பகுதியைச் சேர்ந்த குழந்தைவேல் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். இருவேறு இடங்களில் கிணற்றில் விழுந்து 2 பேர் பலியான சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT