Skip to main content

சிறுமி பாலியல் வழக்கில் மேலும் இருவர் கைது..!

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

Two more arrested in vannarapet case

 

சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை அடுத்தடுத்து காவல்துறை கைதுசெய்த நிலையில், மேலும் அந்த வரிசயைில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

 

வயிற்றுப் பிழைப்புக்காக வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகிதாபானு, சகிதாபானுவின் காதலன் மற்றும் இடைத்தரகர்கள் என 12 பேரை முதலில் கைது செய்தது காவல்துறை.

 

இந்த 12 பேரையும்  விசாரணை செய்ததில் அடுத்தடுத்து, ஆய்வாளர் புகழேந்தி, பா.ஜ.க பிரமுகர் ராஜேந்திரன், செய்தியாளர் வினோபாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை தொடர்ந்து நேற்று முன்தினம் ஃபோட்டோகிராபர் கிரிதரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.


கிரிதரனின் செல்ஃபோன் மூலமாக கிடைத்த நம்பரை வைத்து விசாரணை செய்ததில், குரோம்பேட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவர் ராஜசுந்தரம் என்பவரை கைது செய்து விசாரித்தது. அதில், இவரும் அந்தச் சிறுமியை தன் இச்சைக்குப் பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்தது. இதற்கு இடைத்தரகாராகச் செயல்பட்டது கஸ்தூரி என்கிற அனிதா என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இவர்களைக் கைது செய்துள்ளனர். 

 

இந்த வழக்கில் கைது எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. அனிதாவை விசாரணையில் ஈடுபடுத்திவரும் நிலையில் மேலும் பலர் சிக்குவார்கள் எனத் தெரியவருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மண்சரிவிலிருந்து போராடி மீட்கப்பட்ட நபர் உயிரிழப்பு!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

 

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் தனியார் கண் மருத்துவமனை கட்டப்பட்டு வரும் நிலையில், அந்த கட்டிடத்திற்குத் தேவையான மழைநீரை சேமிக்க மழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்க குழி தோண்டும் பொழுது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து குழிவெட்டும் தொழிலாளர்கள் மூன்று பேர் உள்ளே விழுந்தனர். இதுதொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படை வீரர்கள் குழிக்குள் விழுந்த ஆகாஷ், வீரப்பன் ஆகிய இருவரை போராடி மீட்டனர்.

 

மதியம் 2 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்த நிலையில், 2 மணிநேரத்திற்கு மேலாக முயன்றும் மூன்றாவது நபரான சின்னதுரை என்பவரை மீட்க முடியாமல் போராடி வந்தனர். 15 அடி ஆழம் கொண்ட குழிக்குள் மீட்கப்படாமல் மண்ணுக்குள் புதைந்திருந்த மூன்றாவது நபரான சின்னத்துரை பல்வேறு முயற்சிகளுக்கு பின் சுமார் 5 மணியளவில் மீட்கப்பட்டார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், 108 ஆம்புலன்சில் சின்னத்துரை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால் இறுதியில் சின்னத்துரை உயிரிழந்துள்ளார் என தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Next Story

மழைநீர் சேகரிப்பு குழிக்குள் விழுந்த மூவர்... 2 மணிநேரமாக மீட்க போராட்டம்!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

The three who fell into the rainwater collection pit ... struggle to recover for 2 hours!

 

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் தனியார் கண் மருத்துவமனை கட்டப்பட்டு வரும் நிலையில், அந்த கட்டிடத்திற்கு தேவையான மழைநீரை சேமிக்க மழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்க குழி தோண்டும் பொழுது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து குழிவெட்டும் தொழிலாளர்கள் மூன்று பேர் உள்ளே விழுந்துள்ளனர். இதுதொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படை வீரர்கள் ஆகாஷ்,வீரப்பன் ஆகிய இருவரை போராடி மீட்டனர்.

 

The three who fell into the rainwater collection pit ... struggle to recover for 2 hours!

 

மேலும் ஒருவரை மீட்க முடியாமல் போராடி வந்தனர். மதியம் 2 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்த நிலையில், தற்பொழுது வரை 2 மணிநேரத்திற்கு மேலாக இந்த மீட்பு பணி நடைபெற்றது. 15 அடி ஆழம் கொண்ட அந்த குழிக்குள் மீட்கப்படாமல் ஒரு நபர்  மண்ணுக்குள் புதைந்திருக்கிறார். இன்னும் இரண்டு மணிநேரத்தில் குழிக்குள் சிக்கியுள்ள நபரை மீட்டுவிட முடியும் என தீயணைப்பு துறையினர் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், மூன்றாவது நபரான சின்னத்துரை  தற்பொழுது மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ள நிலையில், 108 ஆம்புலன்சில் சின்னத்துரை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.