Skip to main content

இணைபிரியா நண்பர்கள் விபத்தில் மரணம்.. சோகத்தில் கிராம மக்கள்..

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

Two friends passes away in accident near thittakudi


கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ளது செங்கமேடு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் பிரவீன், வயது 15 அதே ஊரைச் சேர்ந்தவர் இங்கர்சால். இவரது மகன் சூர்யா, வயது 15. இவர்கள் இருவரும் அருகிலுள்ள தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்கள். இருவரும் இணைபிரியாத நண்பர்கள். இந்த நிலையில், நேற்று (22.02.2021) சூர்யாவுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. அதனை அவர்கள், தங்கள் ஊரில் நண்பர்களுடன் கொண்டாடி உள்ளனர். இதற்காக பெண்ணாடத்தைச் சேர்ந்த சூர்யாவின் நண்பர் ஒருவர் சூர்யாவின் பிறந்தநாளுக்காக செங்கமேடு வந்துள்ளார். 

 

பிறந்தநாள் நிகழ்ச்சியை நண்பர்களுடன் முடித்துகொண்டு, பெண்ணாடத்தில் இருந்து வந்திருந்த நண்பரை பெண்ணாடம் வரை கொண்டு சென்று விட்டுவிட்டு சூர்யாவும் பிரவீனும் மீண்டும் தங்கள் ஊரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, கூடலூர் அருகே எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிப்பர் லாரி இவர்களின் இருசக்கர வாகனத்தில் மோதியது. அதில் பிரவீன், சூர்யா இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில், சூர்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரவீனை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து சிகிச்சைக்கு சேர்த்தனர். 

 

சிகிச்சை பலனின்றி சிலமணி நேரங்களிலேயே பிரவீன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சூர்யாவின் உடலை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இரு மாணவர்களின் உடல்களையும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சாலை விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்த ஆவினங்குடி போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

ஒரே ஊரைச் சேர்ந்த இரு மாணவர்கள் விபத்தில் மரணமடைந்த சம்பவம் செங்கமேடு கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்துபோன மாணவர்கள் உடலைப் பார்த்து அவர்களது பெற்றோர்களும் உறவினர்களும் கதறி அழுத காட்சி பார்ப்போரைக் கண்கலங்க வைத்தது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.