Skip to main content

ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கி இருவர் பலி!

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

Two drowned in Attur Kamaraj Reservoir

 

ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பூஞ்சோலையைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் செல்வகுமார். இவரது அண்ணன் வேல்முருகன் பெரியகுளத்தில் வசித்து வருகிறார். வேல்முருகனின் மகள் தர்ஷினி பெரியகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். ஆத்தூரில் நடந்த திருவிழாவிற்காக கடந்த வாரம் வந்த தர்ஷினி சித்தப்பா செல்வகுமார் வீட்டில் தங்கியிருந்துள்ளார். வேல்முருகன் மகளை அழைத்துச் செல்வதற்காக ஆத்தூர் வந்துள்ளார்.

 

அப்போது செல்வகுமார் வேலைபார்க்கும் முதலாளியின் குடும்பத்தினர் திண்டுக்கல்லில் இருந்து ஆத்தூர் வந்துள்ளனர். உறவினர்கள் மற்றும் தனது முதலாளி குடும்பத்தினர் ஆத்தூருக்கு வந்ததை அடுத்து அருகில் உள்ள ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் குளித்துவிட்டு வரலாம் என எல்லோரும் கிளம்பி உள்ளனர். காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு வந்த அவர்கள் அணையின் உள்ளே இறங்கி குளித்துக் கொண்டு இருந்தபோது செல்வகுமாரின் முதலாளியின் மனைவி தண்ணீரில் தத்தளித்துள்ளார். அவரை காப்பாற்ற சென்ற செல்வக்குமாரை தண்ணீருக்குள் தள்ளிவிட்டு முதலாளியின் மனைவி வெளியே வந்துள்ளார். செல்வக்குமார் தண்ணீரில் தத்தளிப்பதை பார்த்த அண்ணன் மகள் தர்ஷினி சித்தப்பாவை காப்பாற்றுவதற்காக சென்றபோது அவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.

 

இறந்துபோனவர்களின் உடலைத் தேடுவதற்காக ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் மற்றும் திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை தேடினார்கள். இரண்டு மணி நேரம் அணைக்கட்டில் தேடிய போது இறந்துபோன செல்வகுமாரின் உடலை முதலில் கைப்பற்றி தரைப்பகுதிக்கு கொண்டுவந்தனர். அதன்பின்னர் அரை மணி நேரம் கழித்து அண்ணன் மகள் தர்ஷினியின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

 

அணைக்கு குளிக்க வந்த இருவர் இறந்து போன சம்பவம் ஆத்தூர் பூஞ்சோலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் இருவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டவுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடனடியாக காமராஜர் நீர்த்தேக்க பகுதிக்குச் சென்று உடலை தேடும் பணியில் ஈடுபட துணையாக இருக்க வேண்டும் என கூறியதையடுத்து ஆத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஜம்ருத் பேகம், ஹக்கீம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்க பகுதிக்குச் சென்று தீயணைப்புத் துறையினருக்கு உதவியாக செயல்பட்டனர். கடந்த இரண்டு வருடத்தில் இதுபோல் 9 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு மாநகராட்சியின் மெத்தனமே காரணம் என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறை-நிலக்கோட்டையில் அதிகாரிகளின் மெத்தனம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Is there an election? Or not?- Complacency of authorities in Nilakottai

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அலுவலகம் உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தேர்தல் தேதி அறிவித்தும் கூட இதுவரை சீல் வைக்கப்படவில்லை. எம்.எல்.ஏ தேன்மொழி ஆதரவாளர்கள் வழக்கம்போல்  சட்டமன்ற அலுவலகத்தை பூட்டிச் சென்ற பூட்டு மட்டுமே அங்கு காட்சிப் பொருளாக தொங்குகின்றதே தவிர தேர்தல் விதி முறைகளின்படி அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

இதே போல் தொகுதி முழுவதும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படவில்லை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் சாலையில் வைத்துள்ள பேனர்கள் அப்படியே இருக்கிறது. தொகுதியில் தேர்தல் நடக்கிறதா? இல்லையா? என பொதுமக்கள் கேட்கும் அளவிற்கு அதிகாரிகளின் செயல்பாடு மெத்தனமாக உள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.