Skip to main content

காலையில் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் மாலையில் சடலமாக வந்த சோகம்!

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

Two college students passed away in an accident near Coonoor

 

நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு அருகே உள்ள பாய்ஸ் கம்பெனி பகுதியைச் சேர்ந்தவர் ரித்விக். 21 வயதான இவர் குன்னூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ரித்விக்கும் அதே கல்லூரியில் படித்து வரும் கோத்தகிரியைச் சேர்ந்த ரிக்சனும் நெருங்கிய நண்பர்கள். ரித்விக்கும் ரிக்சனும் டூவீலரில் கல்லூரிக்கு ஒன்றாக சென்று வீடு திரும்புவது வழக்கம்.

 

அந்த வகையில் தற்போது கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் நடந்து கொண்டிருப்பதால் கடந்த 30 ஆம் தேதியன்று தேர்வெழுதிய ரித்விக் மற்றும் ரிக்சன், பின்னர் தங்கள் நண்பர்களோடு ஜாலியாக அரட்டை அடித்துவிட்டு அன்று மாலை 3.30 மணியளவில் இருவரும் ஒரே பைக்கில் வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் கேத்தி ரயில் நிலையம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு லாரி வந்துள்ளது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், அந்த சாலையில் சறுக்கி கீழே விழுந்துள்ளது. அப்போது துரதிர்ஷ்டவசமாக எதிரே வந்த லாரி அவர்கள் இருவர் மீதும் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி படுகாயமடைந்த ரித்விக்கும் ரிக்சனும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

 

இந்த விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்த கல்லூரி மாணவர்கள் தங்களது நண்பர்களின் உடல்களைப் பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதனர். அதன்பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரித்விக் மற்றும் ரிக்சன்  ஆகியோரின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், போலீஸ் விசாரணையில் உயிரிழந்த மாணவர்கள் இருவரும் ஹெல்மெட் அணியாமல் அதிவேகத்தில் சென்றது தெரியவந்துள்ளது. மேலும், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.