Skip to main content

நெடுவாசல் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராடிய வழக்கில் இருவர் ஆஜராக விலக்கு!!

Published on 17/10/2018 | Edited on 17/10/2018

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ந் தேதி மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதனால் அடுத்த நாள் காலை நெடுவாசல் கடைவீதியில் கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய போராட்டம் காட்டுத்தீயாக பற்றி தமிழகம் மட்டுமின்றி கடல் கடந்தும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் கல்லூரி பள்ளி மாணவர்கள், அனைத்து கட்சிகள், திரைதுறையினர் சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் கலந்து கொண்டு ஆதரவை தெரிவித்தனர். இதனால் போராட்டம் அதிகரித்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி திட்டம் செயல்படுத்தப்படாது என்று ஒப்புதல் அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

 

 Two cases are appealing in the case against Nithuvasal Hydrocarbon in Keeramangalam.

 

அதே நேரத்தில் கீரமங்கலம், வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கருக்காகுறிச்சி, ஆலங்குடி போன்ற பல பகுதிகளிலும் இளைஞர்கள், விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இதில் கீரமங்கலத்தில் துரைப்பாண்டியன் தலைமையில் 7 பேர் மீதும், வடகாடு காவல் நிலையத்தில் வடகாட்டில் போராடிய ராஜகுமாரன் தலைமையில் 9 பேர்கள் மீதும், நல்லாண்டார்கொல்லையில் 4 பேர்கள் மீதும் ஆலங்குடியில் போராட்டம் நடத்திய வாலிபர் சங்க தோழர்கள் 40 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு வருடத்திற்கு பிறகு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் வடகாடு காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் உள்ளவர்களுக்கு சம்மன் கிடைக்கப்பெறவில்லை. அதனால் அவர்கள் 13 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆனால் ஆலங்குடியில் 40 பேரும்,  கீரமங்கலத்தில் இருந்து 7 பேரும் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர். 

 

 

இந்த நிலையில் இன்று திங்கள் கிழமை கீரமங்கலத்தில் போராட்டம் நடத்திய துரைப்பாண்டியன் உள்ளிட்ட 7 பேரும் ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது.. 7 பேரில் இருவர் முகவரிகள் தவறாக உள்ளதாக கடந்த வாய்தாவில் மனு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த மனு பற்றிய விசாரணை செய்த நீதிபதி.. சம்மனில் உள்ள பெயர்களில் என்ன தவறு உள்ளது என்று விசாரணை நடத்தினார் அப்போது.. சேந்தன்குடி கண்ணன்.. எனது தந்தை பெயர் தங்கச்சாமி ஆனால் சம்மனில் தங்கையா என்று உள்ளது என்றார். அதே பொல கீரமங்கலம் குமார் என்பவர் எனது தந்தை பெயர் அய்யாவு ஆனால் ராமசாமி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. என்றனர்.

 

தவறாக உள்ள நிலையில் ஏன் ஆஜராக வேண்டும். அதனால் உங்களுக்கு சரியான முகவரியுடன் சம்மன் வந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜரானால் போதும். அதுவரை வாய்தாக்களில் ஆஜராக வேண்டாம் என்று நீதிபதி கூறியுள்ளார். இதனால் இருவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.