Skip to main content

‘பகலில் நோட்டமிடுவது; இரவில் திருடுவது’ - செல்போனால் இருவர் கைது!

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

Two arrested who involved in theft

 

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மோர்குளம் வடக்குத்தெருவைச் சேர்ந்த அல்அமீன்- ஜாஸ்மின் ஜெமினா தம்பதியர். இவர் தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்புறம் உள்ள காம்பவுண்ட் சுவற்றைத் தாண்டி பின்புறமுள்ள கதவை உடைத்து திருடர்கள் இருவர் உள்ளே புகுந்துள்ளனர். அதன் பின்னர் ஜாஸ்மின் ஜெமினா கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்கச் செயினைப் பறித்துள்ளனர். அப்பொழுது அந்தப் பெண்மணி விழித்துக் கொண்டு அவர்களுடன் சண்டையிட்டுள்ளார்.

 

அங்கு கிடந்த பாத்திரத்தை எடுத்து திருடர்கள் மேல் வீசியதில் அவர்களது செல்போன் கீழே விழுந்தது. அப்பெண்மணி கூச்சலிட, அக்கம்பக்கத்தினர் வர திருடர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். உடனடியாக கீழக்கரை காவல்துறைக்குப் புகார் அளித்தனர். கீழக்கரை டி.எஸ்.பி சுபாஷ் உத்தரவின் பேரில் உடனடியாக அங்கு வந்த குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை செய்து அவர்கள் அங்கு விட்டுச் சென்ற செல்போனை ஆய்வு செய்தனர். அதில் சிவகங்கையைச் சேர்ந்த வாசுதேவன் மற்றும் பால்பாண்டி ஆகிய இருவரையும் சிவகங்கையில் வைத்து கீழக்கரை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து கீழக்கரை அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

 

விசாரணையில், "நாங்கள் பகலில் கிராமங்களில் கட்டிடவேலை மற்றும் கூலி வேலை செய்து கொண்டே அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிடுவோம். ஆண்கள் இல்லாத வீடுகளாகப் பார்த்து அந்த வீடுகளில் கிடைக்கின்ற பொருட்களை எடுத்து கொண்டு சென்றுவிடுவோம். எங்களது செல்போனால் இப்பொழுது நாங்கள் மாட்டிக்கொண்டோம்" என்றனர். இதனால் வீடுகளில் தனியாக இருப்பவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.

Next Story

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Ban for tourists to go to Dhanushkodi

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் நேற்று (31.03.2024) மாலை 6 மணியளவில் தனுஷ்கோடி 3வது சட்டம் முதல் அரிச்சல்முனை வரை உள்ள தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் 6 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ராட்சத அலைகளும் எழுந்துள்ளன.

இதன் காரணமாக தேவலயாம், சாலையோரங்களில் உள்ள கடைகளிலும் கடல் நீர் உட்புகுந்தன. கடல் ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான மதிப்பிலான மீன் பிடி வலைகள் மணலில் புதைந்து சேதமடைந்துள்ளன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் தற்போது சூறைக்காற்றுடன் 5 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுவதால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி கடலுக்குச் செல்ல தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.