Skip to main content

3 வயது குழைந்தைக்கு பாலியல் தொல்லை இருவர் போக்ஸோ சட்டத்தில் கைது!

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

Two arrested under pocso act  ambattur

 

 

அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர், ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்களது வீடு அருகிலேயே ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியைச் சேர்ந்த வளன், நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியை சேர்ந்த சுபாஷ் ஆகியோர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.

 

இவர்கள் இருவரும் அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர். இவர்களது வீட்டுக்கு 3வயது பெண் குழந்தை அடிக்கடி சென்று விளையாடிவந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை குழந்தை அவர்களது வீட்டுக்கு சென்று உள்ளது. அப்போது, அந்த குழந்தைக்கு வளன், சுபாஷ் இருவரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பின்னர், குழந்தை வீட்டுக்கு ஓடி வந்து அழுது கொண்டு இருந்து உள்ளது.

 

இதனையடுத்து, தம்பதியினர் வாலிபர்களிடம் சென்று கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ரமணி தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், போலீசார் வளன், சுபாஷ் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், இருவரும் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. 

 

இதன்பிறகு, போலீசார் இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். பெண் குழந்தைகளை தெரிந்தவர்கள் வீட்டிற்கு அனுப்புவதிலும்கூட தாய் தந்தை மிகுந்த கவனத்துடன் அனுப்ப வேண்டும் என காவல்துறையினர் தெவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத் தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Next Story

ஆட்டோ ஓட்டுநரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Auto driver arrested under POCSO Act for misbehaving with girl

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தொட்டிப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய  மகன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது  சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள்  கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்தை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.