சேலத்தில் மான் இறைச்சியுடன் சுற்றிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், ஒரு ஸ்கூட்டர் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாநகர காவல்துறையினர் கோரிமேடு பகுதியில் ஜூலை 25ம் தேதி மாலை, வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஓர் இன்னோவா கார் வந்தது. அதைப் பின்தொடர்ந்து பதிவு எண் இல்லாத ஜூபிடர் ஸ்கூட்டரில் ஒரு வாலிபரும் வந்து கொண்டிருந்தார். அவ்விரு வாகனத்தில் வந்தவர்களையும் காவல்துறையினர் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறினர்.
அந்த ஊரைச் சேர்ந்த இரண்டு பேரிடம் இருந்து மான் இறைச்சியை விலைக்கு வாங்கி சேலத்திற்கு விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர். இருவரிடம் இருந்து 14 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் மேலும் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரிக்க சேர்வராயன் தெற்கு சரக அலுவலர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவர்களிடம் மான் இறைச்சி விற்றவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய வன விலங்குகள் சட்டம் 1972ன் படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது,'' என்றார்.